பிரியாவிடை நாள் வரிகள்

பள்ளி படிப்பை முடித்து,
கல்லூரிக் கோட்டையில் கால் பதித்தோம்
புதுமை தனிமையானது......
அத்தனிமையை தகர்த்தெறிந்து
இனிமையானதாக மாற்றினோம்.....
இவ்வினிமையின் இடையில் இணைந்த
கோடைகால தேர்வு முடிவின் குளிர்ச்சியையும்.....
குளிர்கால தேர்வு முடிவின் வெப்பத்தையும்- கண்டு
மனம் வருந்தாமல்.....
கண் இமைக்கும் நேரத்தில் கடந்த
நம் நட்பின் நான்கு ஆண்டு கால கனவை களைத்திடாமல்
உள்ளத்தின் ஓர் இடத்தில் விதையாய்
விதைத்திடுவோம்.......
-கவிசதிஷ் செல்-9965909897

எழுதியவர் : கவிசதிஷ் (13-Sep-15, 5:49 am)
பார்வை : 261

மேலே