செல்போன் டவர் வந்ததானால் சிட்டுக்குருவி அழிந்தது உண்மை அது அல்ல

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம்!!! ஆனால் உண்மை அது அல்ல

பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்

இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை

இது தான் நிதர்சனமான உண்மை...

எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்

நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்

அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில் கட்டி தொங்க விட்டோம்

என்ன ஆச்சரியம் 20 வீட்டில் 18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது.

இதை அதிகம் பகிறுங்கள்

நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள் உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்

உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது..

ஓட்டுவீடு இல்லாதது ஒருகாரணம்
மற்றொன்று சிறுதானிய ( கம்பு, ராகி சோழம், சாமை, தினை, குதிரைவாலி) விவசாயத்தை மறந்துவிட்டு பணப்பயிறுகளான வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ததுதும் ஒரு காரணம் !

அவை வாழும் பகுதியில் தானியங்களை சிதறி வையுங்கள்
அவைகளுக்கு சிதறியவையே மிக பிடிக்கும் அபுதாபியில் ஏராளமான சிட்டுகுருவிகள் உள்ளன.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - Puradsifm (23-Sep-15, 9:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 86

மேலே