பூமிக்கும் பாரம் வேண்டாம்
![](https://eluthu.com/images/loading.gif)
படிக்கும்வரை பெற்றோருக்கும், உறவுகளுக்கும் பாரமாய்;
வேலையில் அமரும்வரை நட்புகளுக்கு பாரமாய்;
வாழும்வரை மனைவிக்கும், மகனுக்கும் பாரமாய்;
நான் உயிர்க்கும்வரை மண்ணுக்கும் பாரமாய்ப் போவதெப்போது?
பாரமாய் இருந்தது போதும்,
இனி பூமிக்கும் பாரம் வேண்டாம்!
விவிலியம் முதலாய், இணையதளத்திலுமாய்,
சான்றோர், சபையோரையும் கேட்டேன்.
பாவமில்லை என்றார்!
இறந்தபின் வாழ்வு உடலுக்கன்று - ஆன்மாவிற்கே!
ஆறடி பிறன் நிலமும் வேண்டாம்!
அதனால் கடனும் வேண்டாம்!
எரித்திடுவீர் என்னுடலை,
எச்சத்தை என் கிராம வீட்டிலே,
வைத்திடுவீர் வீட்டு வாசலருகே;
குவளையிலே - சுவற்றினிலே!!!