அழுதவள் சிரித்தாள்

*
இரவு அழுதவள்
காலையில் சிரித்தாள்
என்னவென்று கேட்டேன்?
ஒன்றுமில்லை என்று
ஒதுங்கி நின்று சொன்னாள்.
*
மலராய் சிரித்தத்
தேவதைக் கண்டேன்
தேவை எதுவென
அவளிடம் கேட்டேன்
சொல்லாமல் தலைகவிழ்ந்த
மௌனம் ரசித்தேன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Oct-15, 9:10 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 120

மேலே