வெற்றியின் பெறு பேறாகும்

தோல்வியின் மூலதனம்
தயக்கம்....!!!
வெற்றியின் முதலீடு
துணிச்சல்....!!!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

வெற்றியை விரும்பும் ......
நமக்குத் தோல்வியை....
தாங்கும் மனம் இல்லை....!!!
தோல்வியைத் தாங்கும்
மனம் இருந்தால் அதுவும்.....
வெற்றிதான்.....!!!

இதயத்தில் மகிழ்ச்சி....
ஆன்மாவில் புத்துணர்வு....
வாழ்வில் வெற்றி...
முகத்தில் புன்னகை....
அன்பின் நறுமணம்....
இவை அனைத்தும் ....
வெற்றியின் பெறு பேராகும்....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Oct-15, 5:32 pm)
பார்வை : 133

மேலே