நீவர தவறினால் நானில்லை மறுகணம் 555

பிரியமானவளே...

தேடி நீ வரும்வரை
செய்கிறேன் பெருந்தவம்...

உன் திருவடி வரும்வழி
வைக்கிறேன் மலர்வனம்...

உயிரே உன் முகம்
தெய்வீக தரிசனம்...

என்னை கடந்துசெல்லும்
ஒவ்வொரு நொடியும்...

உன்னை மட்டுமே நினைத்துகொண்டு
இருக்கிறேன்...

உன்னை கடந்துசெல்லும்
நொடிகளில்...

ஏதேனும் ஒருநொடி என்னையே
நினைப்பாய் என்று...

உன் குரல் கேட்க துடிக்கும்
என் இதயம் உன்னைத்தேடி வருதடி...

நாட்கள் பலகடந்து
உன்னை காணவருகிறேன்...

என்னுயிரே சிறிது நீவர
தவறினும் நானில்லை மறுகணம்...

அயல்நாட்டு வாழ்க்கயை
கடந்து வருகிறேன்...

உன்னைத்தேடி இன்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Oct-15, 4:22 pm)
பார்வை : 109

மேலே