பட்டால் தெரியும் உண்மை சம்பவம்
மூன்றரை வயதில் ஒரு குழந்தை
தன் தாயுடனும் அக்கா அண்ணாவுடன்
கோவிலுக்கு சென்றாள்,சென்றதும்
அம்மாவுடன் மட்டுமே இக்குழந்தைஇருந்தது
அக்கா அண்ணா கொஞ்சம் தள்ளி முன்னால் இருந்தனர்
சிறிது நேரம் கழித்து குழந்தையின்
விளையாட்டு தொடங்கி விட்டது
முன்னால் ஓடுவதும் பின்னால் வருவதுமாக
விளையாடியது
அம்மாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை
பூசை முடிந்ததும் பிள்ளையைக் காணவில்லை
அம்மா நினைத்தாள் அக்காவிடம் குழந்தை என்று
அக்கா நினைத்தாள் குழந்தை அம்மாவிடம் என்று
கடைசியில் பிள்ளை யாரிடமும் இல்லை
பூசை முடிந்து மக்கள் வெளியேறுகின்றனர்
குழந்தை எங்கேயோ தெரியவில்லை தேடுகிறார்கள்
பதட்டத்துடன் அம்மா என் குழந்தை வந்தால் அன்றி
நான் வீட்டுக்கு வரமாட்டேன் என்று அழுதழுது தேடுகிறார்கள்
அக்குழந்தையின் அண்ணா வீட்டுக்கு சென்று அப்பாவிடம் சொல்லப் போனான்
அங்கே குழந்தை நிற்கிறது எப்படி வந்தாய் எந்த வழியால் வந்தாய்
என்று கேட்க அது நம்மட ரோட்டாலதான் என்றது
அந்நேரம் நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது
இவ்வளவு வாகனம் சனங்கள் போக்குவரத்து எல்லாம் தாண்டி
சரியான பாதையால் குழந்தை வந்து சேர்ந்து விட்டது
அளப்பரிய சந்தோசம் எல்லோருக்கும்
அக்குழந்தைக்கு வழி காட்டியது ஆண்டவன்
ஆண்டவனைத் தரிசிக்க ஆலயம் சென்றார்கள்
அந்த ஆண்டவனே காப்பாற்றி அழைத்து வந்தார் குழந்தையை
என்னைத் தேடு சகலமும் உன்னைத் தேடும்,
அவர்களின் கவனக் குறைவே இதற்கு காரணம்
ஆடை அணிகலன்களை ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும், இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
ஆண்டவன் கொடுக்கும் சோதனை நன்மைக்கே,
அதிலிருந்து எப்போதும் எங்கே சென்றாலும் எதிலும்
அதிக கவனமுடன் வாழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்
இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது எல்லோருக்கும் ஒரு பாடம்