அதட்டலில்லா அறிவுரை
என் மகனின் கல்லூரி ஆரம்பநாள் விழாவிற்கு முக்கிய விருந்தினராக வருகை தந்திருந்தார் பட்டிமன்றம் புகழ் திரு .ராஜா அவர்கள் .அவரது பேச்சிலிருந்து சில முக்கிய பகுதிகள் ...
அப்போது நாங்கள் கிழிசலை மறைக்க அசிங்கப்பட்டு தூக்கி போட்ட உடைகளை இன்றைய மாணவர்கள் பேசனென்று அணிகிறார்கள் .அந்த மாதிரி கிழிஞ்ச உடைகள் விலை அதிகமாமே ்இந்த டிரிக் எங்களுக்கு தெரியாமல் போச்சே ....
அப்போ எங்கள் அப்பா எங்களை கூட்டிட்டு போய் ஹேர் கட்டிங் , சேவிங் பண்ணிவிடுவார் .இப்போ இது ரெண்டும் எவன் பண்றான் ? கேட்டா ஸ்டைலாம் ...
நாற்பதாயிரத்திற்கு போன் கேட்கிறாங்க.வாங்கி கொடுக்க சொல்லி வீட்டம்மா சப்போர்ட் வேற .அதை வாங்கி நைட் பன்னென்டு மணி வரை டைப் பண்றான் .படிக்கிறான்னு நாம் நினைப்போம் .அவன் பேஸ்புக் , வாட்ஸ அப்ல இருக்கான் .
டிரிபிள் இ ( EEE ) படிக்கிற என் பையனுக்கு ரூம்ல பல்பு நான்தான் மாட்டிவிட வேண்டியிருக்கு .எதுவும் அடிச்சிட போகுது நீங்களே மாட்டுங்க ...என் மனைவி ( அப்போ என்னை அடிச்சா பரவாயிலலையா ?)
வீட்டிற்கு வந்த விருந்தினர் உள்ளே படியேறும் போதே ரூமுக்குள் போய் கதவை மூடிக் கொள்கின்றனர் .அந.தாளு சும்மா எப்படி படிக்கிற ?நல்லா படின்னு உயிரை வாங்குவார் நீங்களே பேசி முடியுங்கள் என்கிறார்கள் .
பெண்பிள்ளைகள் சாப்பிட்டு விட்டு தட்டை எடுக்க நோ மாம் க கான்ட் என்கிறார்கள் .என் புள்ளையை தட்டு கழுவ சொல்கிறாயா ?என அப்பாக்களின் சப்போர்ட் வேறு அவர்களுக்கு .
ப்ரேக் பாஸ்ட்டையும் , லஞ்ச்சையும் கலந்து பதினொன்றைக்கு பிரான்ஸ்ச் என்று சாப்பிடுகிறார்கள் .கே். எப் .சி ல பக்கெட் சிக்கன் ஆர்டர் பண்ணி சாப்பாடே இதுதான்னு சாப்பிடுகிறார்கள் .
அவரவர் வீட்டுக்குள் நடப்பதை இந்த மனிதர் எப்படி அறிந்தார் ? என ஆச்சரியப்பட வைத்தார் . என் வீட்டில் இப் படித்தான் நடக்கறது என பகிர்ந்து கொண்டார் .
நம் வீட்டில்தான இப்படியென நினைத்தோம் .அப்போது எல்லோர் வீட்டிலும் இப்படித்தானா ? என மெலிதாக திருப்தி பட வைத்தார் .
இளைய தலைமுறையின் இன்றைய நிலைமைகளை இவ்வாறு நகைச்சுவையுடன் பகிர்ந்தவர் அவர்களுக்கான அறிவுரைகளையும் அதே பாணியில் கூறினார் .சிறு உணர்ச்சிமயத்துடன் .
வீட்டிற்கு விருந்தனர் வந்தால் அப்பாதான் கடைக்கு ஓட வேண்டியிருக்கு .நீங்க உட்கார்ந்து பேசிட்டிருங்கப்பா .நான் கடைக்கு போயிட்டு வரறேன்னு ஒரு வார்த்தை சொல்லி பாருங்க. பெண்குழந்தைங்க சும்மா நீயே அடுப்புல் நிக்காதம்மா ...இன்னைக்கு நான் சமைக்கிறேன்னு சொல்லி பாருங்க ....அவுங்க ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாங்க .
எங்க காலத்தில் குடிக்கிறதுன்னா டீ , காபிதான் .இப்போ மச்சி ஓபன் த பாட்டில் .தயவுசெய்து இந்த சாக்கடையில் விழிந்துடாதீங்க .இந்த பழக்கம் உள்ள பெற்றோர் தயவு செய்து உங்கள் பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையாவது இதனை விட்டுவிடுங்கள் .வெறும் 350 ரூ இல்லாமல் என்னால் M. COM சேர முடியவில்லை .காரணம் என் தந்தை விரைவாக என்னை விட்டு சென்றதுதான் .அதற்கு இந்த பழக்கமே காரணம் .( இந்த இடத்தில் ராஜாவின் குரல் லேசாக தழுதழுக்கிறது )
என அறிவுரைகளை நோகாமல் எடுத்துரைத்தார் .
தனது பெற்றோரை பார்க்க ஊருக்கு போவதற்று தான் முதன் முதலில் பரிசாக பெற்ற ரு.400 மதிப்புள்ள புத்தகத்தை 60 ருபாய்க்கு அடகு வைத்து ஊருக்கு சென்ற திரு .அப்துல்கலாம் அவர்களின் கதையை பகிர்ந்தார் .
ராஜா அவர்களின் பேச்சு முழுவதும் கைதட்டல்கள் நிறைந்திருந்த்து .பெற்றோரிடமிருந்து மட்டுமன்று .பிள்ளைகளிடமிருந்தும் .அதுவே அவரது பேச்சுக்கு கிடைத்த வெற்றி .