சாப்பிட்டுத் தூங்குங்கள்
சாப்பிட்டுத் தூங்குங்கள்
சட்டென்று விழுந்த மழையும்
சட்டென்று நின்ற மழையும்
ஏச்சுக்கு ஆளாகிறது.
ஏச்சும் பேச்சும் இல்லாமல்
மனிதனால்
இருக்க முடிகிறதா ? என்ன ?
போக்கும் நோக்கும்
புரிந்தவன், புரியாதவன்
கலந்து கட்டி வாழவேண்டியுள்ளது.
நாய், பன்றியின்
நடமாட்டத்தை என்ன ?
கொசுவையே ஒழிக்க
முடியவில்லை.
எல்லாம் ஒருநாள்
சரியாகி விடுமென்று
சாமியை கும்பிட்டுவிட்டு
சாப்பிட்டுத் தூங்குங்கள்.
விடிந்து விடும்.

