கண்ணாடி மிருகம்

தலையை பிட்டத்தை கையால் தட்டி
கண்ணாடி மிருகத்தின் கழுத்தை திருகி
கோப்பையில் கொட்டிய குருதியைப் பருகி
சாமக் கொடையில்
சாமி வந்தவனாய் சத்தமிட்டு
உருவம் சாப்பிட்டவனாய் உற்சாகத்தில் மிதக்கிறான்
உள்ளே சென்ற கண்ணாடி மிருகம்
உயிர் குடிக்க காத்திருப்பது தெரியாமல்..

எழுதியவர் : மணி அமரன் (2-Nov-15, 1:34 pm)
சேர்த்தது : மணி அமரன்
Tanglish : kannadi mirukam
பார்வை : 90

மேலே