அயோத்தி மன்னன் Transition Process ட்விட்டுரை

ராமனுக்குப் பட்டம் சூட்டுவது என்று சுயமாக முடிவெடுத்தாலும், தசரதன் உடனே அதைச் செயல்படுத்திவிடுவதில்லை,அதற்கென்று ஒரு மிக நீண்ட Process |1
Step 1: வசிஷ்டரையும் தன் மந்திரிகளையும் அழைத்து இந்த முடிவைத் தெரிவிக்கிறான். ‘உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கிறான் |2
Sun, Apr 22 2012 10:57:51

Step 2 : வசிஷ்டர் தன் சம்மதத்தைச் சொல்கிறார் |3
Sun, Apr 22 2012 10:59:26

Step 3 : மந்திரிகளின் சார்பாக சுமந்திரன் சம்மதம் சொல்கிறார் (குரல் ஓட்டுபோல், ‘முக ஓட்டு’ வைத்து முடிவு : face language) |4
Sun, Apr 22 2012 10:59:46

மந்திரிகள் சார்பாகப் பேசும் சுமந்திரன், ‘நீ துறவறம் போகுமுன், ராமனுக்கு முடி சூட்டிவிடு’ என்கிறார் : Sequence முக்கியம் அரசே! |5
Sun, Apr 22 2012 11:00:24

Step 4 : எல்லாருக்கும் நன்றி சொல்லும் தசரதன், ‘எனக்குத் தந்த அதே ஒத்துழைப்பை என் மகனுக்கும் தரவேண்டும்’ என்று கோருகிறான் |6
Sun, Apr 22 2012 11:00:57

Step 5 : ராமனை வரவழைக்கிறான். கட்டளை இடவில்லை, தன்னுடைய தீர்மானத்தைக் காரணத்துடன் சொல்லி ‘பதவியை ஏற்றுக்கொள்வாயா?’ என்று கேட்கிறான் |7
Sun, Apr 22 2012 11:02:30

Step 6 : ராமன் சம்மதம் (சந்தோஷத்தில் குதிக்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை, கடமை என ஏற்றான் என்கிறார் கம்பர்) |8
Sun, Apr 22 2012 11:03:00

Step 7 : தசரதன் தன் சிற்றரசர்கள் அனைவரையும் வரவழைக்கிறான், அவர்கள் கருத்தைக் கேட்கிறான் |9
Sun, Apr 22 2012 11:03:30

Step 8 : அவர்கள் ‘ராமன் தகுதியான அரசன்’தான் என்று சம்மதம் சொல்கிறார்கள். தசரதனுக்கு மகிழ்ச்சி, ஆனாலும் குறுக்குக் கேள்வி கேட்கிறான் |10
Sun, Apr 22 2012 11:04:25

Step 9 : ’அரசர்களே, நீங்கள் நான் சொல்வதால் சம்மதித்தீர்களா? அல்லது நிஜமாகவே ராமனுக்கு ஒத்துழைப்புத் தருவீர்களா? உண்மையைச் சொல்லுங்கள்’|11
Sun, Apr 22 2012 11:05:01

Step 10 : சிற்றரசர்கள் ராமனின் பெருமைகளைப் பட்டியல் போட்டு ‘நாங்கள் எடுத்த முடிவு Rationalதான்’ என்று உறுதிப்படுத்துகிறார்கள் |12
Sun, Apr 22 2012 11:05:32

Step 11 : பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்தல் Step 12 : ராமனுக்கு வசிஷ்டரின் அறிவுரைகள் எட்ஸட்ரா |13
Sun, Apr 22 2012 11:06:25

இப்படி ஒரு நுணுக்கமான / கச்சிதமான / எதையும் தவறவிடாத Process இயல்பானதா? அல்லது கம்பரின் ஆசையா? வால்மீகியைப் படித்தோர் சொல்லவும் |14/14
என். சொக்கன்
Sun, Apr 22 2012 11:07:32

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (3-Nov-15, 11:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 54

புதிய படைப்புகள்

மேலே