கம்ப ராமாயணம் பாலகாண்டத்தில் ஒரு பகுதி ட்விட்டுரை
இன்றைக்குக் கம்பன் காலை. முனிவரோடு வீதியில் நடந்த ராமனை சீதைமட்டுமா பார்த்தாள்? பலபேர் ஜொள்ளு,கம்பர் அதை அட்டகாசமாகப் பதிவு செய்கிறார் |1
Mon, Feb 20 2012 22:50:52
’இத்தனை பெண்களின் விழிகளெல்லாம் பட்டுப்பட்டுதான் ராமன் தேகம் கருத்துவிட்டதா? அல்லது அவனது கரிய நிறம் அவர்கள் கண்களில் ஒட்டிக்கொண்டதா? |2
Mon, Feb 20 2012 22:51:50
இன்னொரு பாட்டில், பெண் ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள், ‘என்னை அப்படியே கைத்தாங்கலாகப் படுக்கைக்குக் கொண்டுபோ’ என்கிறாள் |3
Mon, Feb 20 2012 22:52:19
’ஏண்டி? உனக்குக் கண் தெரியாதா?’ என்கிறாள் தோழி. ‘இல்லை, நான் என் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன், இனி திறக்கமாட்டேன்’ என்கிறாள் இவள் |4
Mon, Feb 20 2012 22:52:53
’ஏன் திறக்கமாட்டாய்?’ என்று விசாரிக்கிறாள் தோழி |5
Mon, Feb 20 2012 22:53:12
’ராமனைப் பார்த்தேன், அவன் என்னை விட்டுத் தப்பித்துப் போகமுடியாதபடி கண்களுக்குள் சிறை செய்துவிட்டேன்’ என்று பதில் வருகிறது |6
Mon, Feb 20 2012 22:53:41
இன்னொரு பெண்ணின் புலம்பல், ‘ராமனும் தசரதனும் வாழும் தேசத்தில் ஒருவன் இந்த அப்பாவிப் பெண்ணைத் தாக்குகிறான், நியாயமா?’ |7
Mon, Feb 20 2012 22:54:33
அப்பாவிப் பெண்ணைத் தாக்கிய அந்த ‘ஒருவன்’, மன்மதன். ராமனைப் பார்த்த அவள்மேல் மெல்லிய மேனி என்றும் பார்க்காமல் மலர் அம்பு விடுகிறானாம் |8
Mon, Feb 20 2012 22:55:17
இன்னொருத்தி ‘இத்தனை பெரிய இளவரசன் ராமன், இவன் ஏன் வீதியில் தனி ஆளாக நடந்து வருகிறான்?’ என்கிறாள் |9
Mon, Feb 20 2012 22:56:13
’என்னடி பேத்தல் இது? ராமனோடு முனிவர் வர்றார், லட்சுமணன் வர்றான், நீ என்னடான்னா தனியா வர்றான்னு சொல்றியே?’ |10
Mon, Feb 20 2012 22:56:47
’அவங்களையெல்லாம் யார் பார்த்தாங்க? என் கண்ணுக்கு ராமன்மட்டும்தான் தெரிஞ்சான்’ என்கிறாள் இந்தப் பெண் |11
Mon, Feb 20 2012 22:57:14
ராமனைப் பார்த்தவர்களும், முழுக்கப் பார்க்கலையாம், ’தோள் கண்டார், தோளே கண்டார்’ பாடல் எல்லாருக்கும் தெரியும், அதில் டாப் கடைசி வரி |12
Mon, Feb 20 2012 22:57:48
எல்லாரும் ஒரு கடவுளைப் பார்த்துவிட்டு அவர்மட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள், நிஜமான முழுக் கடவுளைப் பார்த்தவர்கள் யாருமில்லை |12a
Mon, Feb 20 2012 22:58:38
’ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ என்று முடிக்கிறார் கம்பர். நாம் யானை கண்ட குருடர்களை ஒப்பிடலாம் |14
Mon, Feb 20 2012 22:59:30
இன்னொருத்தி ‘சிபிச் சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவன்தானே இந்த ராமன், குலப் பெருமையில் கொஞ்சமும் இவனுக்கு இல்லையே’ என்று இகழ்கிறாள் |15
Mon, Feb 20 2012 23:00:26
ஏன்? ராமனுக்கு என்ன குறை? ஏன் இகழணும்? |16
Mon, Feb 20 2012 23:00:59
சிபி புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுத்தான்,ஆனால் இந்த ராமன் எங்களிடம் இருக்கும் உயிரைப் பறித்துக்கொள்கிறான், திருப்பித் தர மறுக்கிறான் |17
Mon, Feb 20 2012 23:01:35
’நயந்தார் உய்யத் தங்கள் இன்னுயிரும் கொடுத்தார் தமர், எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகல் இவன்’ :) |18/18
Mon, Feb 20 2012 23:02:15
காலை நேரத்தில் கம்ப ராமாயணத்தில் எந்தப் பக்கத்தையும் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கக்கூடாது. ஆஃபீசுக்கு லீவ் போடத் தோன்றும்!
என். சொக்கன்
Mon, Feb 20 2012 23:02:59