என் தந்தை முதியோர் இல்லத்திலே
என் மகனே
நீ பிறந்து நடந்த போது
உன்னை நான் நாளும்
பத்திரமாக பள்ளியில் கொண்டு சேர்த்தேன்
வளர்ந்த போது கல்லூரியிலே சேர்த்தேன்
பிறகு வேலையிலே சேர்த்தேன்
ஆனால்
இப்பொழுது நீ என்னை
முதியோர் இல்லத்திலே சேர்த்திட்டாயே

