சிந்தனைகள்

*உலகின் மிகப்பெரிய சுவர் என்பது சீனப் பெருஞ்சுவர் அல்ல,
அது நல்ல இரு நண்பர்களுக்குள் உருவாகும் இடைவெளிதான்.

*உலகின் மிகப்பெரிய வைரம் கல்லினன் வைரம் என்கிறார்கள்,
உண்மையில் அது அவரவர் குழந்தைகள் த்தான்.

*உலகின் மிகப்பெரும் பாலைவனம் சஹாரா அல்ல,
அது சிறிதும் சிந்திக்காத மனிதனின் மூளைதான்.

*உலகத்தின் உயரமான சிகரம் எவரெஸட் அல்ல,
உதவி நாடி வந்த ஒருவருக்கு ஓடிச் சென்று உதவியவரின் இதயம் தான்.

*மிகப்பெரும் கிரகம் ஜூபிடர் என்கிறார்கள்,
உண்மையில் பெரிய கிரகம்...முட்டாள்களைக்கூட
வைத்துக்கொண்டு தொழில் செய்வதுதான்.

*நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொண்ட ஒரு மனதின் கொதிப்பை விடவா
உலகத்தின் பெரிய எரிமலையான ஹவாயின் மவுனா லோ கொதித்து விடப்போகிறது ?

*இந்தியாவின் சிரபுஞ்சிதான் உலகத்தில் அதிகமாக மழை பொழியும் இடமாம்,
பொருட்கள் வாங்கித் தரச் சொல்லும் குழந்தைகளின் கண்களை
அவர்கள் பார்த்ததில்லை போலும்.

*கம்போடியாவின் அங்கோர் வாட் தான் இன்றளவில்
உலகத்தின் மிகப்பெரும் கோயிலாம்,
ஒரு சந்தோசமான கூட்டுக்குடும்பம் வாழும் வீட்டை விடவா
அது பெரிய கோயில் ?

*உலகத்தின் மிகப்பெரிய நிலவாழ் மிருகம் ஆப்ரிக்க யானை
என்று சொல்பவர்களே,
குடித்திருக்கும் ஒரு சாதாரண மனிதனை விடவா மூர்க்கமானது அது ?

*உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் லண்டனில் இருக்கிறதாம்,
அட குழந்தைகள் விளையாடி கலைக்கப்படாத வீடுகள் தானே
உலகின் பெரிய அருங்காட்சியகம் .

*மனிதனின் எண்ணங்களின் ஓட்டத்தை விட உலகில்
எந்த ரயிலாலும் விமானத்தாலும் வேகமாகச் சென்று விட முடியாது.

இப்படியாக, உலகத்தின் பெரியதும் சிறியதும்
நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும்தான் இருக்கின்றன.
உலகத்தின் வலியதும் எளியதும் நம்மைச் சார்ந்தே கிடக்கின்றன .

எழுதியவர் : செல்வமணி (12-Nov-15, 11:36 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : sinthanaikal
பார்வை : 203

மேலே