கடிதம்

ஒரு ஆண் ஒரு பெண்ணை உயிருக்கும்
மேலாக காதல் செய்தான்,
.
ஆனால் அந்த பெண் அவனையும்
அவன் செயல்களையும்
கவனிப்பதாக இல்லை. .
அவன் தினமும் அவளிடம் சென்று....
என்னுடன் பேசு, ஒரு தடவை
புன்னகை செய் என்று அவளிடம்
கெஞ்சினான்,
ஆனால் அவளே அதை
பொருட்படுத்தாது என்னை
தனியாய் இருக்க விடு என்று
கோபத்துடன் கூறினாள். .
.
அவள் கோபப்பட்டதை
பொறுக்கமுடியாத அவன் தன்
காதலியை பார்த்து (அழுதபடி)
எப்போது நீ புன்னகைப்பாய் என்று
கேட்டான். .
அதற்கும் அவள் கோபத்துடன்...
நீ எப்போது இறப்பாயோ அப்போது.
இப்போது என்னை தனியாய் இருக்க
விடு என்று கூறிவிட்டு சென்றாள்..
.
(அவன் வீடு திரும்புகிறான் )
மறுநாள் காலை அவனது உடலை
அவள் காணுகிறாள் உடன் ஒரு
கடிதம் அதில் எழுதப்பட்டிருந்தது....
.
"என்னை பற்றி உனக்கு தெரியும்.
"என்ன வேண்டுமானாலும் செய்வேன்
உன் முகத்தில் புன்னகையை காண"..

எழுதியவர் : செல்வமணி (14-Dec-15, 12:08 am)
Tanglish : kaditham
பார்வை : 373

மேலே