நீ தூங்கம்மா

உனக்காக ஒரு பாட்டு....
தாலாட்டு....
தாயே நீ கேட்டு தூங்கு....
தங்க மனம் கொண்டாயே....
உன்னப் போல யாரும் இல்லேயே
நீ தூங்கு என் தாயே.....
கல் மேல கால் படாம காத்தவளே,
கண்ணீரில் தாலாட்டை
கவிதையாய் சொன்னவளே...
கவிதையாய் சொன்னவளே...
கவிதையில்லை இது தாலாட்டு
கவல மறந்து நீ தூங்கு....
உடம்புல உயிரை தந்தவளே...
உதிரத்தை பாலாய் தந்தவளே....
உனக்கு ஒரு வரி....என்
உள்ளத்தில் இருந்து தாலாட்டு...
உயிரே...தாயே.. நீ தூங்கு....
பசிக்காம பாத்துக்கிட்டவளே.....
பத்திரமா நான் காப்பேன் உன்ன...
பயமின்றி நீ தூங்கு......
பசியோட விட மாட்டன்.....
பரிதவிப்ப தர மாட்டன்....
பத்திரமா நீ தூங்கும்மா.....
அழகான வாழ்க்கை தந்தவளே....
அழாமல் வாழ வைத்தவளே....
அனுதினம் உனக்காக
அந்த இறைவன வேண்டுறன்....
அன்போட உன்ன பாத்துக்குறன்
அழகா நீ தூங்கும்மா......
முழு நேரம் என்னைக் காத்தவளே,
முன்னங் கை பிடித்து நடந்தவளே,
முதியோர் இல்லத்தில் உன்னை
முன் தள்ள மாட்டேன்....
முப்பது வயதானாலும் என்
முதல் குழந்தை நீயம்மா....
நிம்மதியா தூங்கும்மா.....
வயதானால் என்ன........?
வயிற்று பசி தெரியாம வளர்த்த..உன்ன...
வறுமையில விட்டு நான்
வழி மாறி போக மாட்டேன்.....
வலி தந்து தவிக்க விட மாட்டேன்,
வளமை போல நீ தூங்கம்மா....
உன் கூடவே நான் இருக்கன்.....
மு.பா.அஸ்க்கியா