இப்படிக்கு -- காதலி
காற்றினில் கரைந்து
காதலாகி வருகிறேன். . . . .
காளையுன் இதயம்
கனிவுடன் வருடுகிறேன் . . .
பாட்டினில் மறைந்து
மெட்டாக மலருகிறேன் . . . .
ஏட்டினில் வரைந்த
கவிதையாகக் கலப்பாயா . . .
தென்றலில் தவழ்ந்துன்
தேகம் தடவுகிறேன் . . . .
தேடிய கண்களின்
தேவை என்ன அறிவாயா . . . .
நேற்று வரை நான் கண்ட
ஊற்று நிறை கனவுகள் கூடிப்
போற்று கின்ற வகையில்
கூற்று ஒன்று அருள்வாயா . . . .
தாளமிடும் பாதம்
தள்ளாடி நடக்கையில்
மேளம் ஒன்று கொட்டி
மேன்மை தன்னைத் தருவாயா . . . .
கோலமிட்ட கைகள்
கொண்டாடத் துடிக்கையில்
ஞாலம் போற்றும் நல்ல
விடியலைக் கொடுப்பாயா . . .
போதி மரம் தந்த
புத்தனும் வியந்திடுவான். . .
தாலி மணம் கண்ட
தாமரை என் முகம் பார்த்து . . . .
இப்படிக்கு காதலி
இனி என்றும் என்னைக் காதலி . . . .
*=* - - - *=* - - *=*