மனிதர் வேறு காதல் வேறு
* உலகில் வாழ்கிறோம்
ஒவ்வொருவரும் ;
சராசரியாய்
சகாப்தமாய்
சராசரி சகாப்தமாய்...!
* வாழும் உலகில்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒவ்வொரு உலகு...!
* ஆயினும்
" நீயே
என் உலகு "
எனும் சொல்
வேண்டுதலில் ...
அணு வேரும்
தகிக்கிறது
கனன்று ;
யுகந்தோறும்
சுகிக்கிறது
மனிதம்...!
****************************************************************************************************************************************
* பேரன்பாய்க் குழையும்
மயக்கமொன்று ;
மேதாவி காட்டும்
தயக்கமொன்று ;
வீரியம் பேசும்
பார்வையொன்று ;
வசதியாய் மேயும்
பதவியொன்று ;
கற்பே பழைமை
தேகமொன்று - இது
கற்கை நன்றே
காமமொன்று
இன்ன பிற ...
இங்கே
ஆக்கி வைத்திருக்கிறது
அறிவியல் ;
கைக்குள் உலகு ...!
இன்னும் இவர்களுக்கு
"புனிதம் " புரியாமல்
"இதயம் " பித்தளையெனில் ;
போடவேண்டுகிறேன்
பேரீச்சம்பழமே நன்று...!
**************************************************************************************************************************************
* காதலின் மேடையே
மகாபலம்தான் ;
கொண்டவர் பேச்சு
பலம் மட்டும்
முழங்குவதல்ல...!
* காதலில்
புரியா பலவீனம் ;
மணமாகி
அறிவது அழகோ ...?
* அங்கே...
பழகிய " காதலே " ?
பலவீனம்தான் - நிஜம்
பரிமாறிக்கொண்டாலன்றோ
புனிதம் ...!
* பணிப் பொருத்தம்
பணப் பொருத்தம்
நிறப் பொருத்தம்
பார்த்துப் பழகிப் பறந்து...
மனப் பொருத்தமின்றி
பிரிவு நேரினும் ;
" காதல்
மாசுபடுவதில்லை ...! "
இதோ..
." கழிவியல் " வரலாற்றில்
புதிதாய்
இ(ழி)ரு மனிதர் ...!
****************************************************************************************************************************************
* ஏங்கி ஏங்கி
கலையும்
கலவியலல்ல ;
தாயின் மனதாய்
நிலைக்கும் - மழலை
உளவியல் ...!
* மனிதருக்குண்டு
மரணம் ;
புனிதத்திற்கில்லை ...!
* காதல் காதலாய்
புனிதமாகவே
இருக்கிறது ;
" காதல் இதுவென... "
தனக்கேற்ப
"கலர் " ஏற்றுகிறது
மனிதம் ...!
* மாறுவதே
மனித இயல்பாகிப் போனது ;
மாறாததே
காதல் நியதியானது...!
* ஆம் ...
மனிதம் வேறு ;
புனிதம் வேறு ...!
****************************************************************************************************************************************
* ஆர்ப்பாட்டமாய்
ஆக்கிரமிப்பதல்ல
காதல் ...
அது ;
மொட்டவிழும்
வார்த்தை ...!
தளிர்மிகு
உள்ளம் ...!
விட்டு விட
பட்டு விடும்
உயிர் ...!
மறுஜென்மம் கண்டும்
அழும்
ஆன்மா ...!
தவமே காதல்
வரமே இறை ...!
**************************************************************************************************************************************
* ஆதலால்...
" மிருகமே போ - புனித
மனிதமே வா ...! "
* அன்று ...
மனிதம் இனிது - என்றும்
காதல் அமுது ...!