பாவி மனசு
உள்ளது எல்லாம் தொலைத்தாலும்,
திரும்ப அடைந்து விடலாம் என்றிருந்தேன்,
இப்போது
உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்?
அவனுள் கலந்து,
என் எண்ணங்கள் எல்லாம்
அவனாய் நிரப்பிவிட்டு,
திரும்ப வரமாட்டேன் என்று
அழிச்சாட்டியம் பண்ணுகிறது
பாவி மனசு!