தாஜ் மஹல்

சலவைக்கல் தூரிகைகளால்
காதல் வரைந்த
ஓவியம்.

கண்ணனின் ராதையோ மன்னனின் மும்தாஜ் தாரிகையோ
யமுனைக்கரை முழுதும்
காதல் படுகைகள்..
....

வண்ணக்கலவை ..ஓவியங்களுக்குள்
ஓளிவீசிக் கொண்டிருக்கின்றன
ஆயிரம் கலைஞர்களின்
காதல்...கனவுகள்..
........
விலையுயர்ந்த
கற்கள் எல்லாம்
அணிவகுத்து அஞ்சலி செய்கின்றன
காதலுக்கும்..
காதலின் கல்லறைக்கும்..
...........
ஒரு நிமிடம்
ஷாஜகானாய் மாறத்துடித்த
மனதின்ஆசையொன்றை
கொன்று புதைத்துவிட்டு வந்தேன்
எப்படி என் காதலியை
இறந்தவளாய்
நினைத்தாயென்று...

.....
ஒவ்வொரு கல்லாய்
உற்று நோக்கினேன்...
வறண்ட காலமொன்றில்
காதலியின் பெயரால்..
ஆயிரம் குடும்பங்களில்
ஓளியேற்றி...ய
உண்மைக்காதலனின் மனிதம்
ஒளிர்ந்துக் கொண்டிருந்தது

எழுதியவர் : sindhaa (11-Jan-16, 8:55 am)
பார்வை : 60

மேலே