பொங்கல் வாழ்த்து

அழகான அவன் வரவு
ஆறரிவும் விழிக்கும் அதிகாலை
இந்நாளை இனிதாய் துவக்கி
ஈடில்லா மகிழ்ச்சி தத்தம் கொள்ள
உணவுக்கு மூலவன் உலகிற்கு தாயவன் அவனாலே
ஊரெல்லாம் கொண்டாட்டம்.
எல்லாமும் பெற்று இல்லாமை அகல
ஏற்றம் பெற்று எந்நாளும் வளர
ஐவகை ஒழுக்கம் மறவாது
ஒன்றாய் சேர்ந்து பொங்கிடுவோம்
ஓங்குப் புகழொடு வாழ்ந்திடுவோம்
ஔவைத் தமிழோடு இன்புற்றே.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (15-Jan-16, 3:05 pm)
பார்வை : 2331

மேலே