அவளே அவளின் ஆயுதம் - சந்தோஷ்

அப்படியேதும்
அவள் துரோகம் செய்திடவில்லை
துரோகம் இழைத்துவிட்டதாக
இன்னும் அவனிருதயம்
நம்பத் தயாராகவில்லை.

அவனது
ரணங்கள் பூத்து குலுங்கிய
வெள்ளைமனப் பூங்காவில்
மேலுமொரு வஞ்சக கத்தியொன்றை
செந்தீயில் காட்டியெடுத்து
கொடும் நஞ்சுக்குடுவையில்
காதல் ஈரத்தோடு நனைத்தெடுத்து
அன்பு பரந்த அவன் முதுகில்
கொடூரமாய்.. நாடகமாய்
குத்திப்பழக பயற்சியெடுத்திருக்கிறாள்.

அவ்வளவே..
அவள் காதலென சதுரங்கம்
ஆடியிருக்க வாய்ப்பில்லை.

அவனிடமெடுத்த
அவளின் பயிற்சி
இந்நேரம் அவளுக்கு
வெற்றிக்கொடுத்திருக்கும்..

இந்நேரம்
ஒரு கொலை
நடந்தேறிருக்கும்.
எவனோ ஒருவன்
அவனைப் போல
நடைப் பிணமாகியிருப்பான்.


பாவம் அந்த எவனோ ஒருவன்..!
அவ்வொருவனிடம் இவன்
ஒன்று சொல்லியாக வேண்டும்.

ஃபீனிக்ஸ் பறவை
மீண்டெழும் கதையை...!



--

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (15-Jan-16, 10:01 pm)
பார்வை : 168

மேலே