கவியருவி சிறப்பிக்கும் வாழ்த்துப்பா ---- அறுசீர் விருத்தம்
நன்னெறிகள் பலவற்றை செய்கின்ற
-----" நாகினியார் " பெற்றிற்ற வெற்றியினால்
என்றென்றும் " கவியருவி " பெருமைகொள்ளும் .
------ எந்நாளும் சிறப்புடைய " சியாமளா" வும்
பன்மொழிகள் காட்டிநின்றார் வெண்பாவில்
------ பலர்மகிழ்ந்தே முதற்பரிசால் சிறப்பித்தார் .
வன்முறைகள் நீங்கிடவும் கவிதைசொன்ன
------ வகையான " வள்ளி "யவர் வாழ்கவாழ்க !!!!