மன்றக்கவி

ஈடு இணை அற்று
வீடு துணை அற்று
நாடு பிணை அற்று-தான்
நாடுவதனை நடத்திடும்
நடமாடுவதனை நிறுத்திடும்
நாடக மேடையிலே
நம்மை நிறுத்திடும்


நம் நல்லோன்
நலமிக்க வல்லோன்
நாமம் நவிலுகின்றேன்-புகழ்
நவிற்சியெல்லாம் அவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்


எம் தேவன் ஆவான் ஏகன்
அவன் அனுப்பிய தூதன்
அவனிக்கொரு பாகன்
தரணிக்கொரு நாயகன்
ஆழியிலே அலைக்கழிந்தோருக்கு
வழிகாட்ட தலைசிறந்த மீகாமன்


செந்நெல்லாய் சிவந்து
செம்மலாய் ஆன
அண்ணல் நபிக்கு
சேரட்டும் சலவாத்து


சொற்பமாய் பரவட்டும் கருமை
கற்பமாய் கவிவருவது அருமை
பஸ்பமாய் பாவிகள் ஆவது வழமை
பொற்பாளம் தூவுகிறேன் எம் மரபை
அஸ்ஸலாமுஅலைக்கும்



அழிச்சாட்டியம் அடித்தரை
போலிநாட்டியம் பரப்புரை
வீண்காட்டியம் பொய்க்கருத்துரை
அமெரிக்கா ஊட்டி வளர்த்து
அகிலமே கூட்டிக்கொடுத்து
அறபியரைகாட்டிக்கொடுத்து
மார்தட்டி பேட்டியளிக்கும்



ஐ.எஸ்.அக்கிரமமும்
அவர் வக்கிரமமும்
அதனாலுண்டான சிரமமும்
செப்ப வந்தேன்


அடங்காத அயோக்கியர்மீது
உமிழ்ந்து துப்பவந்தேன்
சாணம் கரைத்து அவர்
முகத்தில் அப்ப வந்தேன்
இதைனைச்செய்தாவது
இறைவனிடம்இருந்து தப்பவந்தேன்


நிறுவினராம் நீதி நல அரசு
சகலரையும் இணையட்டாம்
அழைக்குது இஸ்லாமிய அரசு
சிதறுது பலபேர் சிரசு
தர்மம் எனச்செப்பி கொட்டுது
போர்முரசு


விடுக்கிறது போர் அழைப்பு
தொடுக்கிறதுதொடர் அம்பு
தக்கவைக்கிறது அமெரிக்கா
தன்பிழைப்பு
குட்டை கிளறி தூண்டிவிட்டு
தூண்டிலிட்டதில் நலமாய்
நடக்கிது உழைப்பு


தவறி விழுந்தாலும் எழுந்து
வரத்தெரியாதவரை
அளமிட்ட குளத்தில்
கூண்டிலிட்டு தள்ளிவிட்டு
கொன்றுவிட்டு நம் வழி
நன்நபி வழி என்றிட்டால்
எந்த நீதிதான்ஏற்கும்.


உயிர்கள் உலருகிறது
பயிர்கள் அலறுகிறது
பிணமணம் கிளறுகிது
எத்தனை மழழைகள் குளறுகிறது
மரமண்டை உளறுகிறான்
மார்க்கம் மலருகிறதாம்.


சிரியாவெங்கும் சிறுவர்
சிகையும் சிரமும் கரமும்
சிதறிக்கிடக்குது
சிதைந்த சடலம்
புதைக்க வேண்டும் என
சிந்திக்க கூட எவருமில்லை


அகங்கை எங்கும் கூப்பி
அரங்கை எங்கும் கூட்டி
சலங்கை எங்கும் பூட்டி
மங்கை அங்கம் காட்டி
சடங்கை தொடங்கும் ஐ.நா
என்றடங்கும் உன் பொய் நா


அடங்காத தடங்கல்கள் முடங்காதோ!
ஜடங்களாய் அடங்கிய
விய்மைகள் இனியாவது
வெளிவரத்தொடங்காதோ!


பஸ்பம்-சாம்பல்
காட்டியம்-மன்னரை புகழும்
வார்தைகள்
அளம்-உப்பு
இஃது ஐ.எஸ் அரக்கர் பற்றியது

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (17-Jan-16, 10:01 pm)
பார்வை : 114

மேலே