காட்சி பிழை -38

>> என்மனம் உன்நினைவுகள் நிறைந்த அட்சய பாத்திரம்
கஜலாக எழுதுகிறேன் உனக்கு; காதல் எனும் அர்த்தசாஸ்த்திரம்
____________________________________________________

>>என் இரவுகள் முழுவதும் உன் கனவுகளின் காட்சிகள்
என் கவிதை முழுவதும் உன் கண்களே கூறும் சாட்சிகள்
____________________________________________________

எனைப் பார்த்து சிறகடிக்கும் உன் இமைச் சிறகுகள்
என் மனதறையில் வட்டமிடும்; அதோ இரு பறவைகள்
____________________________________________________

காதலிக்கும் பொழுது காண்பதெல்லாம் கீதங்கள்
காத்திருக்கும் பொழுது கேட்பதெல்லாம் ராகங்கள்
____________________________________________________

>>உயிரின் பிரபஞ்சத்தில் முளைவிட்ட விதையாய்
விழுகின்றேன் காதலிலே ஆன்மாவின் மழையாய்
____________________________________________________

>>யுகத்தின் பிரளயமாய் ஒதுங்குகிறேன் ஓரத்தில்
மனக்குளிரில் நடுங்குகிறேன் இருதயத்தின் ஈரத்தில்
____________________________________________________

>>மழை கொண்டு முளைக்கும் விதையல்ல காதல் ...
மனம் கொண்டு முளைக்கும் (க)விதையே காதல் ...
____________________________________________________

>>நான் சுவாசிக்க யோசிப்பேன்
உன் சுவாசக்காற்று
என் மூச்சிக்காற்றில்லையெனில் .....
____________________________________________________
>>நான் உண்ண யோசிப்பேன்
உன் பெயர் எழுதாத
நெல்மணியில் சமைத்த உணவெனில்
____________________________________________________
>>எனக்கே தெரியாமல்
நான் நடனமாடுகிறேன்
உன் கண்ஜாடையால்
____________________________________________________
>>என் கண்மலர்கள்
உன் கண்மலர்களுடன் இணைந்து
பூக்களின் தேசத்தை ஒரு
புன்னகை தேசமாக உருவாக்க
யுகம் யுகமாக
காத்து கொண்டு இருக்கிறது என்காதல்
____________________________________________________
>>என் இரவென்பது
உன் விழியில்
மலரும் நட்சத்திரப்பூவே
____________________________________________________

>>என் கனவென்பது
உன் விழியில்
பிறக்கும் குழந்தை
____________________________________________________
>>விழியின் மொழியால்
மொழியின் விழியால்
வா வா நாம் காதல் செய்வோம்...
____________________________________________________

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (18-Jan-16, 9:52 am)
பார்வை : 551

மேலே