தீந்தமிழ் கவிதைகள்
தீந்தமிழ் கவிதைகள் !
பாதை ஒன்றை வகுத்திட்டால்
------பயனம் தன்னால் உருவாகும் !
தீயதை நெஞ்சம் மறந்திட்டால்
----- நேர்மை வழிகள் தெரிந்திடும் !
சாதனைப் புரிந்திட மனமுயன்றால்
------சரித்திரம் என்பதும் நிகழ்வாகும் !
வீணாய் வெதும்பி இருந்திட்டால்
-----வெற்றிகள் தன்னால் வந்திடுமா ?
தேனினும் தமிழாய் இருந்திட்டால்
----தீந்தமிழ் கவிதைகள் பிறந்திடுமே !
ஆணவம் அதனை அழித்திட்டால்
-----ஆண்டவன் அருளும் துணையாமே !
---- கே. அசோகன்.