தீந்தமிழ் கவிதைகள்

தீந்தமிழ் கவிதைகள் !

பாதை ஒன்றை வகுத்திட்டால்
------பயனம் தன்னால் உருவாகும் !
தீயதை நெஞ்சம் மறந்திட்டால்
----- நேர்மை வழிகள் தெரிந்திடும் !
சாதனைப் புரிந்திட மனமுயன்றால்
------சரித்திரம் என்பதும் நிகழ்வாகும் !

வீணாய் வெதும்பி இருந்திட்டால்
-----வெற்றிகள் தன்னால் வந்திடுமா ?
தேனினும் தமிழாய் இருந்திட்டால்
----தீந்தமிழ் கவிதைகள் பிறந்திடுமே !
ஆணவம் அதனை அழித்திட்டால்
-----ஆண்டவன் அருளும் துணையாமே !

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Jan-16, 9:27 pm)
பார்வை : 333

மேலே