மரண தண்டனை

மரணமும்
ஒரு
ரணமே.?

பாவங்களை
அறியாமல் செய்யும்
மனிதன் மனம் மாறியும்
பலனில்லை;

பாவத்தின் சம்பளம்
மரணமெனில்

வலிக்காமல்
கொல்
என்பதன்றி
வேறு என்ன
பிரார்த்தனை
இருக்கக்கூடும்
மீனுக்கு நாரையிடம்?

எழுதியவர் : செல்வமணி (22-Jan-16, 9:13 am)
Tanglish : marana thandanai
பார்வை : 294

மேலே