பள்ளியில் நடந்த பாடம்…
வகுப்பறை ஓரத்தில் ஓர் உயரமான பையன் நின்றிருந்தான். அவனது கவனம் படிப்பு பக்கம் இல்லை. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கேள்விகள் கேட்டார்.
“”பானிபட்டு போர் எப்போது நடந்தது?”
“”தெரியாது சார்”
“”போரஸ் பத்தி சொல்லு”
“”எனக்குத் தெரியாது”
“”சரி, குப்தர்களில் முதல் மன்னன் யார்?”
“”தெரியாது”
“”எல்லாக் கேள்விக்கும் தெரியாது.. தெரியாதுங்கிறியே… போன வாரம்தானே பாடம் நடத்தினேன்.. அப்ப நீ எங்கே போயிருந்தே?”
“”டூர் போயிருந்தேன்”
“”வெட்கமா இல்லை உனக்கு? ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை… டூர் போனேன்னு சொல்றியே?”
“”இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்ட ஏன் சார் கேக்குறீங்க? நான் இங்கிருக்கிற கரண்ட் மீட்டர் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்திருக்கேன்”