தூக்கம் விற்ற இரவுகள்

தூக்கம் விற்ற இரவுகள்
முழுக்க
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன்
கவிதைகளை

எனது எந்தக்
கவிதைகளும் இரவில்
தூங்கிக் கழித்ததாய்
புலப்படவில்லை

புரண்டு புரண்டு
தேய்ந்து போன
தரைகளில்
பாயும் தலையணையும்
எழுதிய கவிதைகளை
வாசித்துக்
கொண்டிருக்கையில்

வாத்தியங்களை
முழங்கிக்கொண்டு
முன்றாம் பிறையினை
ரசித்து விடுகிறதென்
எழுதுகோல்

கர்வம் கொஞ்சம்
கூடுதலாக
கண்ணிமைகளை
மூடாத முகத்திற்கு
முன்னால்
எழுந்தாடுகிறது
எழுதுகோல்

பரிதாபமாக நான்
அதனிடத்தில்
கேட்கிறேன்

இப்படி குடிக்கிறாயே
என் இரவுகளை
ஆறுதலுக்கேனும்
ஒரு தாலாட்டு
பாடக்கூடாதா?

கவிதை சுமந்த
காகிதமும் காற்றில்
நடனமாட கூடவே
இசையையும்
மீட்டெடுக்க
எழுதுகோல் எனக்காக
தலாட்டு பாடியது
எனது கவிதைகளையே
எடுத்துக்கொண்டு

தூக்கம்
அப்போதுமில்லை
தூங்கிப்போனால்
தடைபடுமே
எனது தாலாட்டு
கவிதைகள்,,,

எழுதியவர் : செ செந்தழல் சேது (26-Jan-16, 8:42 am)
பார்வை : 121

மேலே