செ செந்தழல் சேது - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செ செந்தழல் சேது
இடம்:  திண்டிவனம்
பிறந்த தேதி :  26-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2014
பார்த்தவர்கள்:  203
புள்ளி:  75

என் படைப்புகள்
செ செந்தழல் சேது செய்திகள்
செ செந்தழல் சேது - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2017 6:31 pm

/ தூண்கள் நான்கு
கட்டி வைத்து அடித்தார்கள்
சனநாயகத்தை/

மேலும்

போராடி வென்ற சுதந்திரம் இன்று ஒரே நாட்டவன் கையில் அடிமையாகிப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2017 7:42 pm
செ செந்தழல் சேது - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 2:32 pm

ஆதாம்
அவள் நிர்வாணம்
வெறும் சதையின்
காட்சியல்ல...
ஏவாளுக்கானதாகும்
தூய மனதின்
வெளிப்பாடு....

மேலும்

ஈருடலை மூடும் ஓருயிரின் ஆடை தான் காதல் 12-Dec-2017 9:38 pm
செ செந்தழல் சேது - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 12:46 am

துகிலுரிக்கப்பட்ட என் மனித
பிம்பத்தில் கீறி விளையாடும்
கொரூரத்தின் சாட்சியங்களை
விடுவிக்கச் சொல்லி
நான் கெஞ்சிய வார்த்தைகளில்
சிலவற்றை பொறுப்புடன்
கேட்டு நகைக்கும் காமத்தின்
வெறியேறிய நாக்குகளின்
வசம் தங்கி விடுகிறது
பெண் அடிமையின் அடையாளமெனும் அஸ்திவாரம்...

ஓய்ந்து வெளியேறிய விந்துவின்
பசபசப்பில்
ஒட்டிக்கொண்ட
என் ஆதி கறுப்பு நிழலே
துணிந்து எழுந்து விட்டேன்
என் உடலின் அழுக்குகளை துடைத்துவிட்டு...
முக்காடெதெற்கென முடிச்சவிழ்த்து
தலைவிரிக் கோலத்தில்
தெனாவட்டோடு தொடர்கிறேன் என்
பெண்மையின் புனிதத்தை...தீட்டை...
புகுத்திய கற்பிதங்களை துகிலுரித்த வண்ணமாய்...
இதற்கு மட்டும் க

மேலும்

வியர்வைத்துளிகள் காயும் முன் பெண்மையின் ஈரம் கண்ணிமை உடைக்கப்படுவதை போல் சூறையாடப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 10:16 pm
செ செந்தழல் சேது - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2016 8:42 am

தூக்கம் விற்ற இரவுகள்
முழுக்க
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன்
கவிதைகளை

எனது எந்தக்
கவிதைகளும் இரவில்
தூங்கிக் கழித்ததாய்
புலப்படவில்லை

புரண்டு புரண்டு
தேய்ந்து போன
தரைகளில்
பாயும் தலையணையும்
எழுதிய கவிதைகளை
வாசித்துக்
கொண்டிருக்கையில்

வாத்தியங்களை
முழங்கிக்கொண்டு
முன்றாம் பிறையினை
ரசித்து விடுகிறதென்
எழுதுகோல்

கர்வம் கொஞ்சம்
கூடுதலாக
கண்ணிமைகளை
மூடாத முகத்திற்கு
முன்னால்
எழுந்தாடுகிறது
எழுதுகோல்

பரிதாபமாக நான்
அதனிடத்தில்
கேட்கிறேன்

இப்படி குடிக்கிறாயே
என் இரவுகளை
ஆறுதலுக்கேனும்
ஒரு தாலாட்டு
பாடக்கூடாதா?

கவிதை சுமந்த
காகிதமும் காற்றில்
நடனமாட க

மேலும்

கவிதையோடு உறவாடும் உயிரின் உயில்கள் 26-Jan-2016 7:39 pm
செ செந்தழல் சேது - செ செந்தழல் சேது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2015 3:18 pm

கண்களில் தெரிவானென காதலனைத் தேடிப்போகையில்
குருடான குளத்தங்கரை எனைபார்த்து
கெஞ்சுகிறது

தண்ணீரில்லையாம்
பதிலாய்
என் கண்ணீரை
கேட்கிறது

காணாத காதலனால் ஏற்றிக்கொண்ட
ஏக்கத்தின் விளைவாய் ஏமாற்றம் மட்டுமே நானாகிப் போனேன்

இதோ தருகிறேன் குளத்தங்கரையே எடுத்துக்கொள்
என் கண்ணீரை

வீணாக்கிவிடாதே
காயும் வெயிலுக்கும் விலைபேசி
விடாதே

என் கண்ணீரிலிருப்பது வெறும் உப்பன்று
உயிரில் உயிராகிப்போன
என் காதலின்
சாட்சிகளை
மறைத்து வைத்திருக்கிறேன்
அதனிடத்தில்

என் கண்ணீரால்
நிரம்பி வழியும்
குளமே வாக்கொன்று எனக்களியேன்
எப்போதேனும் என் காதலனிங்கே வரக்கூடும் அவனிடத்தில் சொல்லிவிடு ஆகாயம்
இருண்ட போதிலும்
அவனையே இன்னும்

மேலும்

நன்றி!!!! 03-Aug-2015 12:04 am
கண்ணீர் மிகவும் புனிதாமான ஒன்று அதை அதிகம் வீணடிக்காதீர்கள் .....:-) அத்துனையும் உங்கள் எண்ணம்போல் மாறும் வல்லமை பெற்றது ... தொடருங்கள் இன்னும் இந்த கவி பயணத்தில் ... 02-Aug-2015 1:37 pm
நன்று 01-Aug-2015 3:20 pm
வலி நிறைந்த உண்மை காதல் வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 27-Jul-2015 3:24 pm
செ செந்தழல் சேது - செ செந்தழல் சேது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2014 8:54 pm

வானத்து
முழு நிலவின்
உடல் முழுதும்
வழியும் சீழுடனே
கலந்த குருதி வாடை!
பாவம் படுத்திருக்கிறாள்! கடைசி காலத்தை எண்ணியபடியே!
இதயம் எழுப்பிய
அதிர்வுகளைத்
தாங்கிக்கொண்டே
அருகே சென்றேன்!
அழுகையும்,அலறலும்
ஒருசேர!
படுக்கையில்
கிடந்த நிலவின்
வலிமுனுகலை கேட்க
இருகாதுகள் போதவில்லை!
அவசரமாதலால்
அவசியமான
மருந்தை எடுத்துத்
தடவ எத்தணிக்க!
அருகிலேயே அதட்டியது அக்குரல்!
அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே
என்றொரு குரல்!
குரலே காட்டிவிட்டது
அதன் திமிறை!
திரும்பி பார்க்கையில்!
தீராத பணப்பசியுடனே!
பாதாள பூதம்போலே!
ஒருவன்
நிழலாடுகிறான்
அவனொரு நிழலாதலால்!
கவனம் திரும்பாது கண்ணில் ஒளியேற்றி
மீண்டும் மருந்தை எடுத்தேன்

மேலும்

கொஞ்சம் உரை நடையாக இருந்தாலும் நல்ல கருத்தை சொல்கிறது படைப்பு. அன்பின் ஆழத்தின் பிரதிபலிப்பு. இதனை கதையாக எழுதி இருந்திருக்கலாம். 30-Nov-2014 9:26 pm
நன்று 30-Nov-2014 9:16 pm
தோழமையே....... மிக சிறப்பானதொரு பதவு...... இருப்பினும் வார்த்தைகளை சுருக்கி இக்கவிதையை படித்திருந்தால் வாசிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கும்....! 30-Nov-2014 9:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ராம்

ராம்

காரைக்குடி
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே