சிவப்பிரகாசம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவப்பிரகாசம்
இடம்:  நெடுங்கவாடி ,திருவண்ணாமல
பிறந்த தேதி :  03-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2015
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  41

என்னைப் பற்றி...

கவிதை விரும்பி

என் படைப்புகள்
சிவப்பிரகாசம் செய்திகள்
சிவப்பிரகாசம் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2017 9:03 am

சிந்தனை நந்தவ னம்செந் தமிழ்ச்சோலை
அந்தி அழகினின் அற்புத செவ்வானம்
விந்தைக் கதிர்விரி யும்சூரி யோதயம்
சந்திரோத யச்சல னம் .

இன்னிசை வெண்பா .

----கவின் சாரலன்

மேலும்

ஆஹா தத்துவம் . மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 20-Mar-2017 8:52 am
காலை மாலை மறந்த துருவங்கள் தானே சிந்தனை 20-Mar-2017 12:40 am
Thank Q கவிப்பிரிய சிவப்பிரகாசம் அன்புடன், கவின் சாரலன் 19-Mar-2017 3:18 pm
சிவப்பிரகாசம் - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 11:10 pm

..............தொலைந்துபோகும் கனவுகள்............

மொட்டு மலர்ந்ததும்
காதைப் பிளக்கும்
கெட்டிமேளச் சத்தம்
பட்டாம்பூச்சியாய் வட்டமடித்த
கனவுகள் சிக்கிக் கொண்டன
மூன்று முடிச்சுக்குள்....!

நாள் குறித்து மாட்டிய விலங்கு
நாள்தோறும் கட்டிப்போடுகிறது
நான்கு சுவருக்குள்...
பெருவிரல் தொட்டு வைத்த திலகம்
தீச்சிகையாய் எரிகிறது
விளக்கணையும் இரவுகளில்...!

தாளில் இட்ட கையெழுத்தில்
மாற்றமடையும் முதலெழுத்து...
கறுப்புமை காய்வதற்குள்
மாறிப்போகும் தலையெழுத்தில்
தலையணையை நனைக்கிறது
அக்கினியில் அஸ்தமனமான
சூரியனின் அடுப்படித் தரிசனத்தில்...!

கைக்குட்டைக்குள் மறைந்த
கைதட்டல் காலங்கள்

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:36 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:36 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:35 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:35 pm
சிவப்பிரகாசம் - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2017 11:10 pm

..............தொலைந்துபோகும் கனவுகள்............

மொட்டு மலர்ந்ததும்
காதைப் பிளக்கும்
கெட்டிமேளச் சத்தம்
பட்டாம்பூச்சியாய் வட்டமடித்த
கனவுகள் சிக்கிக் கொண்டன
மூன்று முடிச்சுக்குள்....!

நாள் குறித்து மாட்டிய விலங்கு
நாள்தோறும் கட்டிப்போடுகிறது
நான்கு சுவருக்குள்...
பெருவிரல் தொட்டு வைத்த திலகம்
தீச்சிகையாய் எரிகிறது
விளக்கணையும் இரவுகளில்...!

தாளில் இட்ட கையெழுத்தில்
மாற்றமடையும் முதலெழுத்து...
கறுப்புமை காய்வதற்குள்
மாறிப்போகும் தலையெழுத்தில்
தலையணையை நனைக்கிறது
அக்கினியில் அஸ்தமனமான
சூரியனின் அடுப்படித் தரிசனத்தில்...!

கைக்குட்டைக்குள் மறைந்த
கைதட்டல் காலங்கள்

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:36 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:36 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:35 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:35 pm
சிவப்பிரகாசம் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2016 6:57 pm

காகிதச் சுமைதாங்கியில்
எண்ணச் சுமையை இறக்கிவைத்தேன்-
கவிதை என்கிறாள் அவள்...!

மேலும்

சிவப்பிரகாசம் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2016 9:11 pm

கன்னி முகம் கனியமுதம்
கண்ணிரண்டும் மதுவமுதம் !
காதுமடல்... கழுத்தோரம்
கம்பன் செய்த கைவினைகள்...!

கஞ்சமில்லா நெஞ்சிரண்டும்
கள்ளூற்றும் மலை முகடு...!
கார்குழலி.... இடை முழுதும்
கஞ்சன் செய்த செய்வினைகள்...!

சங்காத்தி சுண்டு விரல்
செங்காந்தள் மலர்ச் சோலை !
சண்டாளி இதழிரண்டும்
சோமபான தொழிற் சாலை !

நெஞ்சை வாசித்த காரிகை
நினைவில் வசிக்கும் நறுமுகை
நெகிழ்ச்சியில் மயங்கி நெருங்கிட
நரம்பினில் ஏற்றினாள் நெருப்பினை !

ஒற்றை விரல் நான் பற்ற
உடல் முழுதும் தீ பற்ற
உற்றவள்..தேன் ஊற்றவள்
உரசிட... யான் வெற்றினேன்...!

நுதலோடு இதழ் புதைத்து
நுனி நாவால் நாசி தொட்டு
இதழ் ரே

மேலும்

நன்றி தோழரே 10-Nov-2016 8:34 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
Awesome 10-Nov-2016 2:18 pm
சிவப்பிரகாசம் - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 12:41 pm

பெருகும் அந்தியில்
மழை நேரத்துக் காளான்
என முளைக்கிறது
நட்சத்திரங்கள்.

சிறகில் நினைவு குவித்து
வானத்தின் முகத்தில்
வண்ணம் தூவுகிறது பறவை.

கூடுகளில்
இறக்கிவைக்கப்பட்ட முட்டைகள்
அடைகாத்தலுக்காகக் காத்திருக்கின்றன.

கூடுகளுக்குள் விரியும்
முட்டைகளின்
சிறகுக் கனவுகளை இரசித்தபடி
அதிர்வெழுப்பாத மரங்கள்
முகமற்ற நிலவில்
தம் கனவுகளை ஒளித்து வைக்கின்றன.

கடலின் இடுக்குகளில்
கசிந்த மனித வியர்வை
முனை மழுங்கிய வாழ்வை
உப்பாய் வடியச் செய்கிறது
கரைகளில்.

புதையும் இரவில்...
இறுகும் வயல்வெளி
வளைக்குள் பதுங்கிய
நிசப்தத்தை
பெருத்த கிழங்குகளாய்
புதைக்கிறது.

மேலும்

மயிலின் தோகை என்று அர்த்தம் சார். 15-Oct-2015 9:06 pm
மயிற்பீலி அர்த்தம் சொல்லுங்கள் அண்ணா 15-Oct-2015 7:15 pm
ரொம்பவும் நன்றிகள்! சார். 25-Sep-2015 10:58 am
ஓர் இரவை பிரமிப்போடு ரசிக்கமுடிகிறது இந்த கவிதைக்குப் பின்...........!! நினைவுகளின் ஆழமும்,இரவின் கணமும் நிழலாய்ப் படர்கிறது நெஞ்சில் !! 25-Sep-2015 9:27 am
சிவப்பிரகாசம் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2016 5:23 pm

யாரோ தொலைத்த பேனா,
எழுதப்படாமலே
ஒரு கவிதை...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 26-Sep-2016 7:18 am
மிக அழகு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2016 11:47 pm
சிவப்பிரகாசம் - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2016 4:39 am

அமைதி நிறைந்த அறை முழுதும் - வெளியே
அசையும் மரகிலையின் உரசல் கேட்க,
அசைந்திடுதே காற்றில் இதயமும்,
ஆசை கணவனை எண்ணி,
அவரின் நினைவு என்னை,
அனுதினமும் கொள்ள,
ஆறாது மனம் தாளாது,
அல்லிவிழி மூடாது,
அமர்திருந்தேன் மெத்தையிலே,
அலையது படகினை மெல்ல,
அசைப்பதுப்போல் அவர் நினைவது எனை அசைக்க,
அசைந்தாடினேன் அசைவிற்கேற்ப,
அசையும் நான் சிலிர்த்தேன்,
அரைவிழி திறந்தேன் உணர்ந்ததை தேட,
அமிழ்ந்து போனேன் கைகள்,
அதை கணவனவன் பிடிக்க,
ஆருயிரே ! உறக்கம் கொள் என்றவன்,
ஆரிரோ பாட நெஞ்சம் - ஊசலில்
ஆடியவண்ணம் மிதமான உறக்கம் கொண்டது !!!

நின்றாடும் நினைவுகள் ...

மேலும்

நன்றி அண்ணா ! 04-Feb-2016 7:43 pm
மென்மை .... 04-Feb-2016 4:09 pm
நன்றி நண்பரே ! 04-Feb-2016 11:07 am
நன்றி நண்பரே ! 04-Feb-2016 11:07 am
சிவப்பிரகாசம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2015 7:45 pm

பேச நினைத்த
வார்த்தைகள் அனைத்தும்
ஊமையாய் ஒரு புறம் நிற்க
வெட்கம் வேண்டாமேனவே
விலக சொல்கிறது

அருகருகே நாம் இருந்தும்
அதிக தூரமாகவே கிடந்து தவிக்கிறது
நம் காதல் வார்த்தைகள்

ஒரு கணம் சொல்லிவிடலாமென
தைரியமாய்
உனை பார்த்த நொடியில் நீயும் பார்க்க
சட்டென படபடத்து வாயடைத்து நிற்கிறது
காணாமல் போன தைரியத்தை
தேடியவாறே
என் இதயம்

நீயாவது சொல் என
என் இதயம் மெளனமாக உரைத்ததை
நீ உணரவில்லை போலும்
அதனால்தான் என்னவோ
மௌனமாகவே கரைந்து கொண்டிருந்தது நிமிடங்களனைத்தும் .....

மேலும்

மெளனம் தான் உலகில் சிறந்த மொழி என்பேன் , அதில் ஆயிரம் புரிதல்கள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2015 8:51 pm
சிவப்பிரகாசம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2015 8:56 pm

ஒரு தனிமைபடுத்தப்பட்ட
நொடியின் பிம்பங்களில் தொடங்குகிறது
மனதின்
பின்னோக்கிய பயணம்

உயிர் நீர்த்துப்போன
நொடிகளின்
பினைவுகளில் நீள்கிறது
அந்த வாழ்க்கை பாதை

மிகவும் சிக்கலான
சமுதாயத்தின்
நெரிசலில் நசுக்கப்பட்டிருந்தது
என் சுயம்

போலியான சில
உறவுகளின்
தோலுரித்து காட்டியிருந்தது
காலம்

அதற்கு சற்றுத்தள்ளி
காய்ந்து போன
உதிரத்தின் வாடை நினைவு படுத்தியது

துரோகத்தின் கூறிய
கொம்புகள் என் முதுகில் பாய்ந்த
சம்பவங்களை .

ஏமாற்றங்களினால் வெற்றிடமாக்கப்பட்ட
வாழ்க்கைக்கு
கண்ணீர்த்துளிகளும்
உடல் உமிழ்ந்த
அனல் காற்றும் தான்
துணையாய் இருந்தது

மேலும்

செத்த இப்பொழுதா இருக்கும் இப்பொழுதா....இதுவே சிறப்பு /உயர்வு . பிறக்கும் இப்பொழுதா எது சிறப்பு/உயர்வு...சிந்திப்பீர்...செயல்படுவீர். வாழிய நலம் !! ( துரோகத்தின் கூறிய...துரோகத்தின் கூரிய ) ஏமாற்றங்களினால் வெற்றிடமாக்கப்பட்ட வாழ்க்கைக்கு கண்ணீர்த்துளிகளும் உடல் உமிழ்ந்த அனல் காற்றும் தான் துணையாய் இருந்தது...அனைவருக்கும் என்றும் இருப்பது...அருமை ! 15-Oct-2015 9:00 pm
நன்றி தொலம்யே 07-Oct-2015 12:05 pm
சில பாதைகளை கடப்பது கடினம்தான். வலிகள் வழியும் வரிகள்..!! 04-Oct-2015 10:15 pm
உண்மை வரிகள் நன்று. தொடருங்கள். 04-Oct-2015 9:05 pm

படித்ததில் பிடித்த கவிதை


தாய்

உன்னை
கருவினில் சுமந்த அவளை
 கருத்தினில்
சுமக்க

 கவிதை கர்ப்பம் தரிக்கும்.

மேலும்

சிவப்பிரகாசம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 7:32 pm

அந்த பனிக்காற்றின் வருடலில்
தொடங்கிற்று நம் சந்திப்பு
வெளிச்சம் குறைந்த அந்த நள்ளிரவில்
நம் பேச்சும் குறைந்துகொண்டிருந்தது

தீண்டல்களினால் ஊமையானது மொழி
புரிதல்கள் வழியே பிறக்கிறது ஒரு புது மொழி
நாம் சுவாசித்த காற்றில்
பெரும்பகுதி கலந்திருந்தது காமம்

ஆடை கலைத்த மேனியில்
போர்வைக்குரைப்போக்கி நம்மீது படர்ந்திருந்தது
இருள் கசியும் இரவு

நிலவு நம்மை கவனிதுக்கொண்டிருப்பதாய்
நாம் சுதாரிக்கையில்
ஈரக்காற்றை
இழுத்து போர்த்திக்கொள்ள முயன்று தோற்றோம்

ஈரக்காற்றையும் மீறி நம்மில் கசிந்தது
பயம் கலந்த வியர்வை

ஒரு புது விடியலை கண்ட நள்ளிரவில்
நாம் புணர்ந்து முடி

மேலும்

நன்றி அண்ணா 14-Aug-2015 12:24 pm
நன்றி 14-Aug-2015 12:23 pm
ஆஹா நல்ல படைப்பு முடிவு ரொம்ம நல்லாயிருக்கு 14-Aug-2015 8:42 am
ஆகா மிக அருமை தோழரே... கடைசியில் முடித்த விதம் வெகு சிறப்பு... காதலுக்கும் காமத்திற்கும் இன்னும் வித்தியாசம் தெரியாத சிலருக்கு இந்த கவிதை புரிய வைக்கும் ஒரு பாடம்... நல்ல சொற்தேர்வில் சிறக்கிறது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 2:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (128)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
நேதாஜி

நேதாஜி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (132)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (129)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே