விரல்தொடும் வேளையிலே

அமைதி நிறைந்த அறை முழுதும் - வெளியே
அசையும் மரகிலையின் உரசல் கேட்க,
அசைந்திடுதே காற்றில் இதயமும்,
ஆசை கணவனை எண்ணி,
அவரின் நினைவு என்னை,
அனுதினமும் கொள்ள,
ஆறாது மனம் தாளாது,
அல்லிவிழி மூடாது,
அமர்திருந்தேன் மெத்தையிலே,
அலையது படகினை மெல்ல,
அசைப்பதுப்போல் அவர் நினைவது எனை அசைக்க,
அசைந்தாடினேன் அசைவிற்கேற்ப,
அசையும் நான் சிலிர்த்தேன்,
அரைவிழி திறந்தேன் உணர்ந்ததை தேட,
அமிழ்ந்து போனேன் கைகள்,
அதை கணவனவன் பிடிக்க,
ஆருயிரே ! உறக்கம் கொள் என்றவன்,
ஆரிரோ பாட நெஞ்சம் - ஊசலில்
ஆடியவண்ணம் மிதமான உறக்கம் கொண்டது !!!

நின்றாடும் நினைவுகள் ...

எழுதியவர் : ச.அருள் (3-Feb-16, 4:39 am)
பார்வை : 321

மேலே