சஅருள்ராணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சஅருள்ராணி |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 05-Sep-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 906 |
புள்ளி | : 291 |
நல்லவற்றை அனைத்தும் பிடிக்கும்,
தமிழும்,தமிழ் அழகும்,பண்பும் பிடிக்கும்,
அமைதியின் அழகையும்,
ஆனந்த கொண்டாட்டத்தையும் சுவைக்க ரசிக்க பிடிக்கும்,
இயற்கையோடே ஒன்றித்து இணைய பிடிக்கும்,
பிடிக்கும் நல்லவற்றை எல்லாமே பிடிக்கும் !!!!
அசையாது அமர்ந்தபடி நானிருந்தேன் ,
அரசமரம் தலையசைத்து
அன்னமே என்னாயிற்று என்றது ?
அமைதியில் ஒன்றுமில்லை என்றேன் !
குயில்கள் குரலெழுப்பி
குமரிக்கு என்னாயிற்று என்றது ?
குறு அசைவில் ஒன்றுமில்லை என்றேன் !
மேகம் அசைந்தாடி
மங்கைக்கு என்னாயிற்று என்றது ?
மௌனத்தோடு ஒன்றுமில்லை என்றேன் !
வானம் விரித்தெழுந்து
வண்ணமே என்னாயிற்று என்றது ?
வாய் சிணுங்கலோடு ஒன்றுமில்லை என்றேன் !
தென்றல் பூப்போல் உரசி
தங்கமே என்னாயிற்று என்றறிந்தேன் என்றது ?
தலைநிமிர்ந்து நான் காண ,
தலைவர் என் துணைவரவர்,
தென்றலின் துணையோடு
தேரில் பறந்து வர ,
தவித்த மனம்
துள்ளி குதி
காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !
காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !
காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !
கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை
காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !
காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !
காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !
கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை
நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !
நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !
நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !
உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !
என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !
என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !
உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !
நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !
நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !
நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !
உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !
என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !
என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !
உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !
( இதுவரை : புது எண்ணிலிருந்து குரல் அழைப்பு ராதிகாவிற்கு வருகிறது )
ராதிகா : [ அமைதியாக ]
புது எண்: ராதிகா ? எண் குரல் உனக்கு தெரிகிறதா நான் சித்தார்த் ?
ராதிகா : ம்ம் ஏன் விடுகை குரல் அழைப்பு எப்படி என் எண் கிடைச்சது ?
சித்தார்த் : அதுலாம் அப்படித்தான் ! சரி என்னமோ சொன்ன நிறைய தொல்லை விடுகைனு ? என்னனு சொல்லு
ராதிகா : [ விவரம் சொல்கிறாள் ]
சித்தார்த் : அந்த எண்களை எனக்கு அனுப்பு .
ராதிகா : [ அந்த எண்களை அனுப்பிகிறாள் ]
சித்தார்த் : சரி என்ன பண்ற ?
ராதிகா : நான் சென்று வருகிறேன் [ என்றபடி அழைப்பை துண்டிக்கிறாள் .]
[ ராதிகாவுக்கு அதன் பின் எந்த அழைப்பும் யாரிடமிருந்தும் வரவில்லை .சி
அமைதியிழந்து வேளையில்
அவர் மடியென விவிலியத்தில்
அழுகையோடு என் சிரம் வைப்பேன் ,
அடுத்தநொடி உதட்டோரம் சிரிப்பும்
அரவணைப்பில் கதகதப்பும்
அவர் கரம் என் முடி கோதுவதான உணர்வும் !
அத்தனை மென்மையும் அழகுமென
அதிசயம் மனமுழுதும் மலர் ததும்பும் !
சுற்றி அரை முழுதும் வெண்மை குடியேறும்
சுகமான சிலிர்த்திடும் தருணமது !
சிதைக்கும் எட்டாது
சொல்ல கவிக்கும் வார்த்தை கிட்டாது !
செல்வனுக்கு எட்டாத விலை ,
சுவை போஜகனுக்கும் கிட்டாத சுவை !
சிறு குழந்தையென மகிழும் உள்ளம்
சுவையினை உணரும் தருணம் !
சோகமா எப்போது எதற்க்காக என்று நானே
சற்று எண்ணும்வண்ணம் என்
சிந்தையும் நினைவிழந்து போகும் !
இன
எனக்கு அவளை பிடிக்கும் - ஆனால்
என் மனதை முழுதுமாய் வெளிப்படுத்த
என் இலக்கு என்னை தடுக்கிறது ,
எனக்கு அவளிடம் பேச ஆயிரமுண்டு
என்ன அதனை பேச வார்தைதானில்லை !
காலமுண்டு கவலைவேண்டாம் ,
கலிப்பான மன ஒப்பந்த நாளன்று - அவள்
கலைத்தாலும் கண்ணயர்ந்தாலும்
கடிகார நேரம் பாராது பேசுவேன் என்று ,
கவலைவிட்டு கடைமையை செய்ய வேண்டும்
கடந்திடும் காலம்
கைசேரும் காதல் வரம் !
நான் பேச நினைக்கிறன்,
நேரம் கிடைக்கின்றது - ஆனால்
நாளைய எண்ணங்களினால் - இன்று
நகர்த்துகிறேன் உன்னிடம் பேசாது !
நினைத்திருப்பாய் மறந்தேன் எனவே தான்
நொடிகூட அழைக்கவில்லை என்று - ஆனால்
நான் மறக்கவில்லை
நம் வாழ்வை நின
காற்றோடு உரசும் இசை
கவியோடு அன்னையின் தாலாட்டு,
கவலை வேளையிலும் கோபத்திலும்
கண்டித்து அரவணைக்கும் தந்தை,
சீண்டி விளையாடும் உடன்பிறப்பு,
சிலிர்க்க செய்யும் மணவாளன்,
தெளிந்த சிந்தை தரும் ஞானி,
தவிப்பிலும் களிப்பாக்கும் தோழன்,
துன்பம் இன்பம் பகரும் காதலன்,
கடல் , காதலின் கண்ணாடி வின்பம் !
விடுமுறை என்றாலே கேட்கும் முதல் ஒலி
விளையாடி திரியும் சின்ன மொட்டுக்கள் - இன்று,
வாட்டம் ஏனோ ஒலி கேட்கவில்லை என்றேன் ?
வார்த்தை கோர்க்க அறியாது வானத்தை காட்டியது ,
வாடியவாறு அழுகையுடன்.
வானம் பார்க்க இயலா வெயில்,
வண்ணம் எங்கனம் அறிந்திடா கண்கள்,
வெப்பம் தணிக்க துடிக்கும் மரங்கள் சோகத்தில்,
வினாவினேன் மரங்களே எங்கே உங்களின்,
வாசமுடைய பாசமிகு தென்றல் என்று ?
வினா எழுப்பாதே என் தோழியே,
விளையாடும் என் தோழரின்
வெப்பம் தணிக்க முடியாது,
விரல்க்கோர்த்து வாசம் தரும் உறவை இழந்து - என்
வாழ்க்கை தனிமையானதை கண்டாயா ?
வருத்தம் அதுதானோ,
விடுமுறை சுற்றிலா சென்றுள்ளனரோ ?
விடைகூறு அழைத்து