காதல் கடல்
காற்றோடு உரசும் இசை
கவியோடு அன்னையின் தாலாட்டு,
கவலை வேளையிலும் கோபத்திலும்
கண்டித்து அரவணைக்கும் தந்தை,
சீண்டி விளையாடும் உடன்பிறப்பு,
சிலிர்க்க செய்யும் மணவாளன்,
தெளிந்த சிந்தை தரும் ஞானி,
தவிப்பிலும் களிப்பாக்கும் தோழன்,
துன்பம் இன்பம் பகரும் காதலன்,
கடல் , காதலின் கண்ணாடி வின்பம் !