சிவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  படுக்கபத்து,தூத்துக்குடி
பிறந்த தேதி :  23-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2016
பார்த்தவர்கள்:  848
புள்ளி:  158

என்னைப் பற்றி...

வாழ்வில் எந்த நிலைக்கு போனாலும்....rnஇருந்த நிலையை என்றும் மறக்க மாட்டேன்.....

என் படைப்புகள்
சிவா செய்திகள்
நிலா அளித்த கேள்வியில் (public) vviji மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2018 9:54 am

கவிதை எழுதுவதற்கு ஏதேனும் தகுதிகள் ஏதேனும் இருக்கிறதா ?

மேலும்

கவிதைக்கு தகுதி வேண்டாம்.எழுத பயம் வேண்டாம் 31-May-2018 8:17 am
காதல் வேண்டும் முதலில்... காதல் 06-May-2018 1:12 pm
மனதில் உணர்வு மிகுதி பின் எதற்கு தகுதி 18-Apr-2018 6:54 pm
பதில் அளித்தமைக்கு நன்றி தோழரே 13-Apr-2018 2:45 pm
சிவா - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2018 12:13 am

இன்றைய காலத்தில் யாருக்கு அதிக மனஅழுத்தம்
உள்ளது ?

மேலும்

அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு.... 06-May-2018 1:10 pm
கிடைத்தவர் எல்லாம் மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறரா..ஒன்று விடை பெற்று நகர்ந்து போனால் அடுத்ததில் வந்து உதிக்கும் ஆசை...மன அழுத்தம் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாத அனைவருக்குமா...?இல்லை கிடைக்க வேண்டியது கிடைக்காத யாவருக்குமா? முரண்கள் பொதிந்து கிடக்கிறது ஒவ்வொரு கேள்வியிலும்...மீண்டும் முரணே முன் வந்து நிற்கும் கிடைத்திடும் விடையினிலும்.. மன அழுத்தம் என்பது அவரவர் எண்ணம் சார்ந்தது..இதிலும் உதிக்கும் ஓர் முரண் மன அழுத்தத்தோடு...? 20-Apr-2018 12:51 am
தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கவும் திருப்திப்படுத்தவும் போராடும் போராளிகளுக்கு தான் மனஅழுத்தம் அதிகம். பாவம் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் தான் சிறந்த முட்டாள்கள் என்பதும், அவர்களின் எண்ணம் என்றும் முழுமை பெறபோவதில்லை என்பதும். 18-Apr-2018 3:13 pm
கிடைத்ததை வைத்து வாழ தெரியாத அனைவருக்குமே மன அழுத்தம் உள்ளது . 18-Apr-2018 6:14 am
சிவா - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-May-2018 1:06 pm

தெளிவு படுத்துங்கள்... உறவுகளே

என் தங்கையிடம்
காதலிக்ககூடாது...

என்று சொல்லிவிட்டு
நான் காதலிப்பது தான்

ஆணாதிக்கமா?

மேலும்

ஆணாதிக்கம் தான்.....! 07-May-2018 3:26 pm
உங்கள் காதலியும் இன்னொருவன் சகோதிரியாய் இருக்கலாம் அல்லவா...? 06-May-2018 8:30 pm
தான் விரும்புவதை மற்ற சகோதரனுக்கும் விரும்பாத வரை நீங்கள் சிறந்த இறை விசுவாசியாக மாட்டீர்கள் ..இது ஒரு நபி மொழி..என்னைப் பொறுத்த வரையில் நீங்களும் காதலிப்பதை நிறுத்தி விட்டு பெற்றோரின் விருப்பத்துக்கேற்றதோர் பெண்ணை மண முடித்து ஏன் உங்கள் தங்கைக்கும் ஓர் முன்மாதிரியாக இருக்கக் கூடாது ! 06-May-2018 6:27 pm
1 .சுய நலம் . ஊருக்கு உபதேசம் 2 . தங்கையையும் காதலிக்க அனுமதித்து நீங்களும் காதலிப்பது பரந்த மனப்பான்மை . 3 . தங்கையை அனுமதிக்காது தான் காதலிப்பது தவறு என்று உணர்வது உயரிய குணம் . 4 . காதலெல்லாம் வேண்டாமென்று நீங்களும் தங்கையும் தாய் தந்தையர் சொற்படி மணமுடித்து வாழ்வில் அமைவது உத்தமம் . 06-May-2018 6:00 pm
சிவா - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 4:32 pm

போதி மரத்தின் கீழ் அமர்ந்தேன்
புத்தனாகவில்லை !
ஆல மரத்தின் கீழ் அமர்ந்தேன்
ஞானி ஆகவில்லை !
மீதி மரங்களின் கீழெல்லாம் அமர்ந்தேன்
எந்தத் தெளிவும் பிறக்கவில்லை !
சாலையோரத்து மரங்களின் நிழழ்ல்களில்
தென்றலுடன் கை கோர்த்து நடந்தேன் ...
கவிஞன் ஆனேன் !

-----கவின் சாரலன்

மேலும்

ஆய்வதற்கு ஏதாவது இருக்கிறதா தெரியாது . நீங்கள் ரசிப்பதற்கு நிறையவே இருக்கிறது . படித்து ரசியுங்கள் . மிக்க நன்றி கவிப்பிரிய வே .ஆ . 15-Jan-2019 3:05 pm
தமிழ் கவிதை கற்க இக்கவிதை ஆரம்பம் தமிழ் அன்னை ஆசிகள் வேண்டி கவிதை இலக்கிய ஆய்வு பண்ண ஆவல் இயற்கை வண்ண ஓவியம் படைப்புக்கு பாராட்டுக்கள் 15-Jan-2019 12:13 pm
மண் புழு நிலத்தை வளமாக்கும் கவிதை மனத்தை வளமாக்கும் . அருமை மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் 14-Nov-2017 8:23 am
காற்றெங்கும் வாழ்க்கை நெஞ்சில் சுவாசமாகிறது. மரமெங்கும் மனிதம் பறவைக்கூட்டில் வாழ்கிறது. சாலையெங்கும் நினைவுகள் இன்பத்திலும் துன்பத்தில் ஒரு துளி கண்ணீர் சிந்த வைக்கிறது. சிந்திய துளி மண்ணில் மண்புழுவாகவும் காகிதத்தில் கவிதையாகவும் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 11:20 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2017 7:00 pm

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியூர் அருகே
சுண்ட விளை கிராமம் .அன்று கிராமமே! திருமண கோலம் போட சத்தம் இன்றி நடந்து முடிந்தது அவளின் திருமணம். வாழ்க்கையின் நாட்கள் ஒட தொடங்கினர்
மனித பிறவிக்கே உரியதான தொடர் பிரசவ சத்தம். வருடங்கள் உருண்டோட கனவனின் குடியின் விரீயமும் அதிகரித்தது. இரவு உணவு நாளைய விடியலை பொறுத்தது. காலை சூரியன் அவர்களின் வயிற்றை நிரப்புகிறது. இரவு சோறு விடிவதற்குள் உணவாகிறது எறும்பிற்கு. தினம் தினம் அடி உதை இன்னும் எத்தனையோ! சித்தரவதைகள் தாங்க முடியாத பெண்மை உயிர்த்தெழுந்தது கண்னகி உருவத்தில்.
இரவோடு இரவாக வெளியேறி விட்டது அந்த பெண் தெய்வம் தோளில் மூன்று பிள்ளை நிலாக்களை சுமந்த

மேலும்

சிவா - Kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2017 5:00 pm

வான் மகள் அள்ளி தெளிக்கும் வெள்ளை பூ தான் நீ
மண் தொட்டதும் மனம் கமல்கின்றாயே....

வெள்ளி கம்பிகள் நீ வீசும் போதெல்லாம்
சிரித்து வாங்கும் மரங்கள் இங்கு உண்டு
தெறித்து ஓடும் மனிதர்களும் உண்டு....

உன்னுடன் நீ அழைத்து வரும் அந்த அழகு பூங்காற்று
உனக்கும் முன் ஓடி வந்து தழுவி செல்லும்....

கண்முடி உன்னை ரசித்தால்
வெள்ளை காகிதம் எல்லாம்
கவிதையாய் நீ இருந்தாய்....

குடை கூரை கொண்டு உன்னை நான் தடுக்கும் போதெல்லாம்
காலின் மேலே தவழ்ந்து ஓடி செல்வாய்...

துளி துளியாய் உன்னை கண்ணத்தில் ஏதும் போதெல்லாம்
ஒரு நொடியில் நீ இடுவாய்

மேலும்

வறண்டு போன தேசங்கள் போல் இன்று உள்ளங்களும் உன் வருகையை காத்திருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 10:45 pm
அருமை 31-Oct-2017 9:22 pm
சிவா - Aruvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2017 6:23 pm

வளர்க்கும் நாய்க்கு
இல்லத்தில் தனியறை
வளர்த்த தாய்
இருப்பதோ தெருமுனை

மேலும்

பாவமான மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அன்புக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:19 pm
அருமை 31-Oct-2017 9:20 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 9:19 pm

இரவின்-ஒளியிலே

நிலவாய் வெண்பனியாய்
சிரிக்கும் பெண் நிலவே

இனி தினமும் எனைக்கொல்லும்
பேரழகே

நீ அசையும் அழகினில்
புது அகிலமும் தோன்றுமடி

உன் கொலுசின் சினுங்களில்
என் இதயம் விழித்ததடி

இதழ் சிரிப்பினில் விழி பறித்தாய்
இமை எங்கிலும் நீ நிறைந்தாய்

விழிகள் இணையும் நேரம்
விலகி செல்வது ஏனடி

இனி தொடங்கும்
இந்த ரயில் பயணம்
இனிதே முடியட்டும்...

இனி எப்போது பார்பேன்
இரவின் ஒளியில் என் நிலவை.....

மேலும்

பாதைகள் ஓடிக்கொண்ட இருக்கும் வாழ்க்கையில் சில பயணங்கள் மட்டும் விரைவாக முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:35 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 9:12 pm

முதல் முதலாக
விழிகளால்
அவள்...
எழுதிய காதல் கடிதத்தில்
நிறைந்தே இருந்தது...
நிசப்தம்...

மேலும்

இதயத்தின் சுவாசங்கள் அல்லவா அதிலுள்ள வார்த்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:30 pm
சிவா - A JATHUSHINY அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2017 7:14 pm

நீ என் கண்படத் தொட்டெறிந்த
பொருட்கைளை எல்லாம் சேகரித்து வருகிறேன்...

என் இதயத்தை தவிரி.
எறிந்த இடம் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன் இன்றுவரைக்கும்......

ஏனடி பெண்ணே என்னைக் கைவிட்டாய்........ தாங்கமுடியவில்லை

மேலும்

மிக்க நன்றி சகோதரி... 27-Oct-2017 11:59 am
அன்புக்காக ஏங்கும் சிந்தனை அருமை வாழ்த்துக்கள் 27-Oct-2017 11:40 am
உண்மைதான் அண்ணா...... நன்றி. 26-Oct-2017 12:30 pm
அன்பின் ஏமாற்றம் மனதுக்கு பாரமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2017 12:13 pm
முதல்பூ அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jun-2016 7:49 pm

என்னவளே...

நான் இதுவரை ஓவியம்
தீட்டியதில்லை உனக்கும் தெரியும்...

எதோ முயற்சித்தேன்
உன்னை வரைந்துவிட...

என் ஓவியத்திற்கு
தொடக்கமும் தெரியவில்லை...

ஓவியத்திற்கு
முடிவும் தெரியவில்லை...

எந்த ஓவியனின் கைகளையும்
நம்பி இருக்க நான் விரும்பவில்லை...

நீயும் விரும்பமாட்டாய்
எப்போதும்...

உன் மனதின் எண்ணம்
எனக்கு தெரியுமடி...

என் உள்ளம்
உனக்கு புரியாதா...

என் உணர்வுகளை வண்ணம்கொண்டு
தீட்ட முயற்சித்தேன்...

எந்த வண்ணம் கொண்டு
உன்னை தீட்டுவது...

உன் விரல் தொட்டு
காட்டிவிட்டு செல்லடி...

என் இதயத்தில்.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அண்ணா. 06-Jun-2016 7:34 pm
அவளே சிறந்த ஓவியம்தானே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழமையே. 06-Jun-2016 7:33 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அண்ணா. 06-Jun-2016 7:33 pm
சுவாசத்தின் உணர்வுகள் காகிதத்தில், வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 06-Jun-2016 7:33 pm
சிவா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 5:39 pm

அழியாத காயம்
மருந்தில்லாத வியாதி
நீர்
அருந்தியும் தீராத தாகம்
இரு மனதின் சுவாசத்தில்
வாழும் ஜீவன் காதல்

என்னவளுக்கு பெயர்
வைக்க
கடவுள் எழுதினானா?
பூக்களின் அகராதியை;
அவள்
அவ்வளவு அழகில்லை
அவளை
விடயழகு யாருமில்லை

கன்னி
நடந்தால் மண்ணிலுள்ள
எறும்புக்குக் கூட வலிக்காது
புன்னகை
முத்துக்களை சிந்தினால்
பூக்களும் ரசிகனாகும்
இதழ் விரிக்காமல் பேசும்
அவள் பாஷை
காட்டு மூங்கில் புல்லாங்குழலின்
மெல்லிசைக்கு ராகமாக கேட்கும்.

அழகாய் பிறந்த
மலர்களெல்லாம் நினைத்ததாம்!
மருதாணி இலையாக பிறந்து
உதிர்ந்திருந்தால்
அவள் ரேகைகளில்
மருதாணி பூவாய் பூத்திருக்கலாம்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Mar-2016 6:46 am
அற்புதமான இதயம் நண்பர் 23-Mar-2016 8:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 1:15 pm
ஆஹா அழகிய வரிகள் நண்பரே ....!! 22-Mar-2016 11:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (41)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (41)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
மேலே