பிரிவின் வலி

இருக்கும் போது
அருமை தெரியவில்லை...
- முதியோர் இல்லத்தில்
கொண்டு விடுகின்றனர்...
இறந்த பின்
கதறுகின்றனர்....
- என்னை விட்டு
பிரிந்து விட்டீர்களே என்று...

பிரிவின் வலி கொடியது
அதை பெற்றோர்களுக்குத் தராதே...
பின் அவர்களது
நிரந்தர பிரிவு
நிரந்தர வலியை உண்டாக்கும்...!

உனக்கு அறிவுக்கண் திறந்து
நல்ல நிலைக்கு ஆளாக்கி
வெற்றியின் பாதையை
காட்டித்தந்தவர்களுக்கு
வலியையும் வேதனையையும் காட்டாதே.....
ஒருநாள்...
நீயும் அந்த பிரிவின் வலியை
உணரக் கூடும்... மறவாதே...!

எழுதியவர் : நித்யஸ்ரீ (3-Feb-16, 11:39 am)
Tanglish : pirivin vali
பார்வை : 273

மேலே