சொல்லின் செல்லாதவர்

கிருபானந்த வாரியார் பேச்சை கி.வா.ஜ. ரசித்து கேட்பதுண்டு. அதுபோல் கி.வா.ஜ.வின் சிலேடை பேச்சுகளை வாரியார் ரசிப்பதுண்டு.

ஒருமுறை வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார் கி.வா.ஜ. கடைசிவரை இருந்துகேட்டு விட்டுப் போகுமாறு வாரியார் கேட்டுக்கொண்டார்.

“இயன்றவரை கேட்கிறேன். எனக்கு பல பணி உள்ளது. இறுதிவரை இருக்க இயலுமா தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு கி.வா.ஜ. சொற்பொழிவு கேட்க அமர்ந்தார்.

சிலேடை மன்னரைப்பார்த்ததும் வாரியாருக்கும் சிலேடைத் தமிழில் பேச உற்சாகம் ஏற்பட்டது.

ராமாயணத்தின் இறுதிப் பகுதியை எடுத்துக் கூறிய வாரியார், பல சிலேடை வாக்கியங்களை இடையிடையே உதிர்த்தார். வாரியாரின் சிலேடைப் பேச்சில் தன்னை மறந்து, தன்பணிகளை மறந்து இறுதிவரை வாரியார் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார் கி.வா.ஜ.

கூட்டம் முடிந்ததும் கி.வா.ஜ. விடம் சென்று “கடைசிவரை இருந்து கேட்டீர்களே” என்று வாரியார் நன்றி சொன்னார்.

அதற்கு அவர், “உங்கள் சொற்பொழிவு அருந் தேன்(அருமையான தேன்). அதை அருந்தேன்( அருந்த மாட்டேன்) என்று எவன் சொல்வான்? அருந்தவே( பருகவே) இருந்தேன்.

நீங்கள் சொல்லின் செல்வர்” என்று வாரியாரைப் பாராட்டினார் கி.வா.ஜ.

உடனே வாரியர், “சொல்லின் செல்வர் நான் அல்ல. அது அனுமனுக்கு உரிய பட்டமல்லவா?” என்றார்.

“உண்மை தான். நீங்கள் சொல்லின் செல்வர் அல்ல. நீங்கள் சொல்லின் எல்லாரும் செல்லாமல் இருந்தல்லவா கேட்கிறோம்!” என்றார் கி.வா.ஜ.



* ஏபிசிடி... ஸ்டாப்!



அண்ணா அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து, “தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவராமே! ஆங்கில எழுத்துகளான ‘அ,ஆ,இ,ஈ’ எழுத்துகள் வராத நுõறு வார்த்தைகளைக் கூற முடியுமா?” எனக் கேட்டார். உடனடியாக அண்ணா, ஒன்று முதல் தொண்ணுõற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொல்லி கொண்டு வந்தார். நுõற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’ஈ’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லாரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அண்ணா, ’குகூOக’ எனக் கூறி நிறைவு செய்தார்.





********************************

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (5-Feb-16, 10:10 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 125

மேலே