ஐந்துதலை நாகம் குத்தினால்
இரு புலவர்கள் ஒரு காட்டுப் பாதையின் வழியே சென்றுகொண்டிருந்தனர். நடந்து கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு.
உடனே அவர்‘ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது. என்ன செய்ய?’ என்றார்.
அதற்கு அடுத்தவர்,‘பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்’என்றார்.
அதாவது பத்துரதன் என்றால் தசரதன்.
தசரதனின் புத்திரன் என்றால் ராமன்.
ராமனின் மித்திரன்(நண்பன்) என்றால் சுக்ரீவன்.
சுக்ரீவனின் சத்துரு(எதிரி) என்றால் வாலி.
வாலியின் பத்தினி(மனைவி) என்றால் தாரை.
தாரையின் கால் எடுத்து என்றால் தாரை என்ற சொல்லில் உள்ள கால் (õ)
நீக்குவது.
இந்த வாசகத்தின் பொருள்,
தசரதனின் மகனான ராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி
வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை. முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பது பொருள்.