திசைமாறிக் கிடப்பதுவா மனிதாபிமானம்
வயிரெலாம் காய்ந்திருக்க இன்றும் 
சாலையோரம் சிலர் சாய்ந்திருக்க 
பெய்த மழையில் மட்டும் 
எப்படித்தான் முளைத்ததோ மனிதாபிமானம் 
ஆடி யென்றால் மட்டுமே 
முறைவைத்து வந்து செல்ல 
மனையாளின் சீதனமோ மனிதாபிமானம் 
உன்னோடு பிறந்த உன்இதயம் 
உனக்காக துடித்திருக்க -நீ 
உறவாடப் பிறந்த மறுஇதயம் 
உணவின்றி தவித்திருக்க -கண்டுங்காணமல் 
திசைமாறிக் கிடப்பதுவா மனிதாபிமானம் 
-மூர்த்தி
 
                    

 
                             
                            