சுந்தரமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சுந்தரமூர்த்தி |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 09-Apr-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 940 |
புள்ளி | : 1294 |
படிப்பு பள்ளிவரைதான் . ஆனால் இன்னும் படிக்கிறேன் அனுபவபாடம் . என்கருத்துக்களால் மகிழ்ந்த நண்பர்களால் இங்கே எழுதுகிறேன் . நான்கு சுவற்றிக்குள் முடங்கிய என்வரிகள் நான்குபேரின் பார்வைக்காக... rnவள்ளுவரின் கருத்தாழம் கன்னதாசரின் எளிய தமிழில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி எழுத வேணடும் என்ற பேராசையில் எழுதி வருகிறேன்..
நிழல் எது?
நிஜம் எது?
அறியா உலகமிது
உன்நிலை எது?
நினைவு எது?
அறியவா போகிறது..
அழித்தாலும் மிதித்தாலும்
நீ நீயாயிரு..
-moorthi
நெடுந்தூரம் கடந்துவிட்டேன்
சுடுகிறது சுவாசிக்கும் காற்று...
பெண்1; அந்த பேய்விரட்டும் சாமியார் ஏன்? என்னை பார்த்து நடுங்குறார்னு தெரியலையே ...!
பெண்2: அது ஒன்னுமில்லைடி .. நீ அவர் மனைவி ஜாடையில் இருக்கியாம்
-மூர்த்தி
பெண்1; அந்த பேய்விரட்டும் சாமியார் ஏன்? என்னை பார்த்து நடுங்குறார்னு தெரியலையே ...!
பெண்2: அது ஒன்னுமில்லைடி .. நீ அவர் மனைவி ஜாடையில் இருக்கியாம்
-மூர்த்தி
விதவை
இருண்ட வானில் நிறம் சேர்க்க
ஒளிகண்ட திசைக்கு நேர் எதிராய்
வானில் பிறந்த வானவில்லாய் -மண்ணில்
பெண்ணாய் உருகொண்டு பிறந்தவளை..
வீசும் காற்றாய் விதிவந்து அடிக்க
கூடிப்பேசும் தலைவனை தனியாய் பிரிக்க
ஏசும் உலகிதோ கூடிச் சுழன்றிட..
வளர்பிறை காணாத வெண்ணிலவாய் -வாழ்வில்
தனிமையில் தேய்ந்திடும் பெண் நிலவை
வெள்ளை அடித்து வேறொரு திசையில்
விதவை இவளென ஒதுக்கும் உலகமே..
ஓர்நாள் விடியாமற் போகட்டும் உன்வானம் -அன்று
நிலவில்லா இருட்டேதான் தீர்மானம்
-மூர்த்தி
வேப்பமர நிழலில்
மூச்சை வாங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு புல்லாங்குழல்
உயிரைக் கொடுத்து
உருவத்தைப் பெறுகிறது
புடவையில் பட்டாம்பூச்சி
பலூன் விற்பவர்
ஊதித் தள்ளுகிறார்
வாழ்க்கையை
ஊழல் பணத்தில்
உனக்கும் பங்காய்
ஒரு குவாட்டர்
முகவரி கிடைத்ததும்
அனாதையாகிப் போனார்
முதியோரில்ல பாட்டி
-மூர்த்தி eluthu sep9
வேப்பமர நிழலில்
மூச்சை வாங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு புல்லாங்குழல்
உயிரைக் கொடுத்து
உருவத்தைப் பெறுகிறது
புடவையில் பட்டாம்பூச்சி
பலூன் விற்பவர்
ஊதித் தள்ளுகிறார்
வாழ்க்கையை
ஊழல் பணத்தில்
உனக்கும் பங்காய்
ஒரு குவாட்டர்
முகவரி கிடைத்ததும்
அனாதையாகிப் போனார்
முதியோரில்ல பாட்டி
-மூர்த்தி eluthu sep9
1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க வி தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்பை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.
இரவில் ஒரு வானவில்
வெள்ளை ஆடை வேண்டாமென
வண்ணஞ் செய்த வானவில்லிற்கு ..
இருண்ட மனம் ஒளிராதென
எந்த பாரதி சொன்னானோ
இன்னும் வரவில்லையே..!
இரவில் ஒரு வானவில்
-மூர்த்தி
தன்நிழலால் நிலவை மறைத்து
அமாவாசை கொண்டாடுகிறது
-உலகம்
(பெண்ணே நீயும் நிலவாம் )
கடவுள் அருகே இருந்தாலும்
விழுந்தேதான் கிடக்கின்றன
-பூசையில் மலர்கள்
(பெண்ணே நீயும் மலராம்)
நீ புத்தனுமில்லை
நான் போதிமரமுமில்லை
என்னில்நீ ஞானம்பெற..
மடிந்தால் நிரந்தர உறக்கம்
இடிந்தால் தோன்றும் குழிகள்
அடி மேல் படிகள் விழுந்தாலும்
துடிப்பை விலையாய் கேட்பார்.
இட்டவை தோள் கொடுக்கும்.
விட்டவை நிம்மதி கெடுக்கும்.
சொட்டும் மழையின் பாதை
நடக்கும் ஆற்றின் ஓடை.
பள்ளமும் வெள்ளத்தால் நிரம்பும்
உள்ளமும் கள்ளத்தால் நிறையும்.
ஆசைகள் மோசம் செய்யும்
அசைவுகள் பாவத்தின் முகங்கள்.
உலகின் நிலை பரிதாபம்
வாழும் உள்ளம் விபரிதம்,
கேட்பவை எல்லாம் கிடைத்ததில்லை
நடப்பவை யாவும் நினைத்ததில்லை.
கண்ணால் காண்பதை நம்பாதே!
விண்ணும் மண்ணில் கரையும்.
ஏழையின் குடிசை சிரிப்பு
நல்ல உள்ளத்தின் இனிப்பு.
இரவுக்கு பகல் துணைதான்
உறவுக்கு பிரிவு இணைதான்.
கையெழுத்தை அழகாக்க
உன்பெயரை எழுதிப் பார்த்தேன்
கவிதையாகி போனது
அன்னையின் பெயரெழுதி யிருந்தால்..
உயிரிலே கலந்திருக்கும்
தந்தையின் பெயரெழுதி யிருந்தால்..
உடலோடு இணைந்திருக்கும்
நட்பின் பெயரெழுதி யிருந்தால்..
உதவ ஓடிவந்திருக்கும்
உன்பெயரை எழுதியதால்..
மயிராய் போனது
என்முகத்தில் தாடியாக...