பெண்ணே நீயும்
தன்நிழலால் நிலவை மறைத்து
அமாவாசை கொண்டாடுகிறது
-உலகம்
(பெண்ணே நீயும் நிலவாம் )
கடவுள் அருகே இருந்தாலும்
விழுந்தேதான் கிடக்கின்றன
-பூசையில் மலர்கள்
(பெண்ணே நீயும் மலராம்)
நீ புத்தனுமில்லை
நான் போதிமரமுமில்லை
என்னில்நீ ஞானம்பெற..