எழுதாத பக்கங்கள் -

தூசு தட்டிப் பார்த்து
பழைய நாட்குறிப்பின்
எழுதப்படாத பக்கங்களை
புரட்டிய பையன் கேட்டான்

எழுது கோளை
தொலைத்து விட்டீர்களா?

ஆமாம் .
பொய்யுரைத்தேன் .

பென்சிலும் தொலந்து விட்டதா?
மறுபடியும் கேள்வி முளைத்தது

இருந்தது.
ஆனால் எழுதவில்லை .

மறுபடி அவன் கேட்பதற்குள்
நானே சொன்னேன்

தலையெழுத்தை
புரிந்து கொள்ளாத காலம் அது
என்றேன் .

புரியவில்லை அப்பா .
இது போல
உன் குழந்தையும் கேட்க்கும்
அப்போது உனக்கு புரியும் என்றேன் .

அவன் நாட்குறிப்பை மூடிவைத்தான்.

நான் அன்று எழுதாத
பக்கங்களின் நினைவுகளில்
புதைந்து போனேன் ...

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (8-Feb-16, 1:14 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 262

மேலே