இதுவும் கவிதை

மேகத்தைச் சுருட்டி
கடற்கரை
மண்ணில் விரித்தேன்
நட்சத்திரங்களை
நாற்காலியாக்கினேன்
நிலவைப் பறித்து
விளக்கு கம்பத்தில்
மாட்டினேன்.
ஏதாவது எழுத
வேண்டும்..
எழுத எழுத
அழித்துக்
கொண்டே
இருந்தது
அலை.
ஐயோ மறந்து
விட்டேன்
கடலை
நான்காக மடித்துச்
சட்டைப்பையில்
போட..
அப்பாடா...
அதுவும் முடிந்தாயிற்று ...
இனியாவது
ஒரு ஹைக்கூ
உருப்படியாக
கைக்கு
எட்டுமா?

எழுதியவர் : சிவநாதன் (19-Feb-16, 4:24 pm)
Tanglish : ithuvum kavithai
பார்வை : 98

மேலே