முள்ளும் மலரும்
முள்ளும் உண்டு
மலரும் உண்டு
ரோஜா செடியில்....
மலரை முதலில் பார்த்துவிட்டால்
அதை பறிக்கும் ஆர்வத்தில்
கைகள் முள்ளின் மேல் தான் படும்...
அதே முள்ளை முதலில்
கண்டால் அந்த மலர்
நம் கைகளுக்கு
கிடைப்பது எளிது....!
அது போல் தான் வாழ்க்கை..
அதில் இன்பமும் உண்டு
துன்பமும் உண்டு
இன்பத்தை முதலில் கண்டவனோ
துன்பத்தை கண்டு அஞ்சுகிறான்
ஆனால்
துன்பத்தைக் கண்டவனோ
இன்பம் துன்பம் இரண்டையும்
வரவேற்கின்றான்......
இன்பதுன்பம் வாழ்வின் அங்கம்
ஆதலால்
இன்பம் கண்டு மயங்காதே...
துன்பம் கண்டு துவளாதே....!