சலாவு 55 கவிதைகள்

மறுபடியும் ...
காற்றில் கலைந்த கோலத்தை ..
எப்படி சேர்க்க முடியாதோ ..
அதுபோல ..
உன்னில் இருந்து என்னை பிரித்துவிட்டு ..
சேர்க்க நினைக்கின்றாய் ..
தொலைதூரம் சென்று விட்டு ..
திரும்பி பார்க்கிறாய் ..
வேண்டுமென்றே விட்டு ..
விலக நினைத்தாய் ..
இப்பொழுது ..
வேண்டுமென்று என்னை வேண்டுகிறாய் ..
காலங்கள் மாறும் ..
பட்ட காயங்கள் மாறுமா .
மறுபடியும் ...
தீராத வலி நெஞ்சில் ..
.........
..........................சலா,

எழுதியவர் : (29-Feb-16, 12:24 am)
பார்வை : 69

மேலே