ஞான வாசிட்டம்- இறை வாழ்த்து

விநாயகர் துதி
****************
ஆனை முகத்தனை ஆறுமுகன் சோதரனை
பானை வயிற்றனை பாடிட வைத்தானை
காலம் இலாதென் னுயிரில் கலந்தானை
ஞாலம் கடப்பினும் நினை !

*****************
நீரினால் தீயணைப்பத் தீயாய் மறைகின்றேன்
போரிட்டே தீவினையில் வெந்துபோய் - பாரில்
வெளிப்போந்தேன் மற்றெந்த சிந்தனையு மற்றே
களிப்பாக்கும் கங்கா தரன் ! (1)

வேத முரைத்தவர் வீட்டினிலே யான்பிறக்க
யாது புரிந்தே னொருதவம் - ஓதுபுகழ்
பண்பதன் எச்சமென வாழவே இங்கெனக்கு
சண்முகன் தந்தான் அருள் ! (2)

இணையேது மில்லாள் அளித்த உதவி
துணையாகச் சூழுலகில் போனேன் - பணியாக
திண்மையே யாவிலு மேயவள் தெய்வமாய்
உண்மையில் வாழ்ந்தாள் துணிந்து ! (3)

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (1-Mar-16, 4:36 pm)
பார்வை : 116

மேலே