சேட்டைகளை நிறுத்திவிடு

அவள்
அன்பாலொரு
முத்தம் தந்தாள்
முகத்தில்..

முகம் சிவந்தது
கூடவே
வலியும் சேர்ந்தது..

கோபம் கொண்ட
மூளையது
கையினை ஏவ
கன்னத்திலொரு அறை
மூர்ச்சையாகினாளவள்..

இரத்தம்
சொட்டியவளைக்கண்டு
மனநிம்மதி
கொண்டானவன்
கல் நெஞ்சம்
கொண்டவனல்ல அவன்
பொறுமைக்கும் அளவுண்டாம்
பெரியவர்கள் சொல்வார்கள்..

அவள் தொல்லைக்கு
அளவில்லை
என் செய்வேன்
யானும்
மூட்டையவளே உன்
சேட்டைகளை நிறுத்திவிடு
எனை நிம்மதியாக
உறங்கவிடு..

எழுதியவர் : உப்பளச் செல்வன் (29-Mar-16, 4:44 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 150

மேலே