அழகு மொழியாள்

வலிக்கொடுத்து வந்தேன் தாங்கினாள்.....
என் வலியல்லாது
என் இதயத்தின் வலியையும் புரிந்தவள்.......

வாழ வகை செய்தவள்
வாழ்கையை இழந்தாளும்
வாழ்த்துகிறாள் என்னை......

வீழ்கின்ற இடமெல்லாம்
விழி நீரை துடைத்தவள்
வாடிய கண்களுடன் - என்
கண்ணீரை துடைத்தவள்......

வாழ்க்கை கற்றது பல
அவையும்
அவள் சொல்லிய மொழியே!!....

அவள் பார்க்கின்ற பார்வை
பால்வீதியாய் பலமுறை
பாசத்தின் அடையாளம்.....

தொண்டை சோறும் செரிக்கும்
அவளின் அமுத கைகளில்
முகமெல்லாம் மல்லிக்கை பூத்தவள்
உலகின் அழகை கொண்டவள்.......
அவள்தான் என் அன்னை........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (11-Apr-16, 8:37 pm)
பார்வை : 182

மேலே