நம் காதல்

சிப்பிக்குள் முத்தாய் அழகாய்
துவங்கியது நம் காதல்க்கதை!!

இரவின் நிசப்தத்தை போல்
வீரியமானது நம் புரிதல்!!

பூக்கள் நாம் பூந்தோட்டமாகும்
கனவுகளுடன் நம் வாழ்க்கை!!

காலமென்னும் கயவன் நம்
மகிழ்ச்சியைத் திருட சோகக்காட்சி!!

காட்சிகள் மாறும் கண்ணாளனே
நமக்கான காதல் மாறாது!!

கடலின் நீலமாய் பூவின்
வாசமாய் உன்னுள் நான்!!

உலக சுகங்களில் மகிழ்ச்சியில்லை
அவை என்றுமென் முதன்மையில்லை!!

நாட்களனைத்தும் உன்மீது தலைசாய்த்து
உன் முகம்பார்த்து விடிந்தால்.....

- அது மட்டுமே போதும்
எனதுயிரே!!!!

எழுதியவர் : ரசிகா (15-Apr-16, 6:57 am)
Tanglish : nam kaadhal
பார்வை : 656

மேலே