காலம்

காலம்
""""""""""
வைகறை களைந்து
மங்கலான ஆடைக்குள்!
பனிப்பூகாரை
அள்ளிப்பூசி
தனக்குள் தடுமாறும்
காலைப்பொழுது!

அசதியாக இருக்கும்
படுக்கை விரிப்புக்களில்
நேற்றைய
சந்தோச ரேகைகளை,
கைபிடித்து பார்க்கிறது
யன்னலுக்குள் ஓடிவந்த
ஊதக்காற்று!

வெட்கம் வழிந்தொழுக
கைபிடித் தேனீரை
கைகளுக்குள் பொத்தி
வைச்சு பார்வையாலே
விழுங்கிவிட்டு போகிறாள்
மிச்சம் இருந்த உயிரையும்!

அமைதியை தள்ளிவைத்து
ஆத்மார்த்தமான
வாசனை ஒன்று
நனைந்த கூந்தலுக்குள்
சுற்றிவைத்திருப்பாள்
பூக்களும்
தலைகுனியும்!

காதில் விழும்
ஆலயமணியில்
சலனங்கள் கரைந்து
இன்றைய நாளின்
கடமைகளின்
அவசியங்கள்
நினைவுக்கு வரும் !

பத்துப்பொருத்தம்
பார்த்து ஒரு
நூலிலையில்
தவறவிட்ட,
விதவை ஜாதகம்
நான்!
என அழுதுவழியும்
சாலையோர மின்குமிழ்

காலத்தின் கைபிடிக்குள்
விதியின் நிகழ்ச்சிநிரல்
ஒழுங்காக எழதப்பட்டதா?
என்ற சந்தேகம் வராதவரை
எல்லாமே சாதாரணமாக
இருக்கும்!
இனி
பேசிப்பயனில்லை என்று
தெரிந்தும் எப்போதுமே
பேசிக்கொண்டு
போகும் நானும்
என்னுள் சுவாசிக்கும்
வெண்பனிப்புகாரும்!

எல்லாமே என்னுடன்
முடியட்டும் அடுத்து வரும்
நாட்களுக்கு இவை எடுத்து
வரவேண்டாம்!
என கெஞ்சும் ஆழ்மனசு!!"

லவன்
""""""""""""""

எழுதியவர் : லவன் (4-May-16, 3:20 pm)
Tanglish : kaalam
பார்வை : 102

மேலே